பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

113


போர்க்குப் பெருந்துணையாச்சிறந்த சோழன் மறவர் பலர் இப்பாண்டிநாட்டிற்குடியேறினராவர். குலோத்துங்க சோழனுக்குப்பின்னே சோணாடு பலவேற்றரசராற் படை யெடுக்கப்பட்டுப் பிறர்பிறர் ஆட்சிக்குள்ளாகி அரசுரிமை மாறுபட்டதனானே. இம்மறவர் தம்படைத்தலைமை இழந்து தந்நாட்டே வேற்றரசர்கள் கீழ் ஒடுங்குதலினும் வேற்றுநாட்டிற்குடியேறி வாழ்தல் சிறந்ததாமென்று கருதிச்சோணாடுவிட்டுக் கடலோரமாகப்போந்து சேது தீரத்துக்காடுகெடுத்து நாடாக்கித் தம்மரசு நிலையிட்டு ஆட்சிபுரிந்தனரா வரெனக்கொள்ளினுமமையும். இவர் ஆட்சியுட்படுத்த நாட்டிற்கும் இவர்பயின்ற செம்பிநாட்டின் பெயரே பெயராக இட்டுவழங்கினர்போலும். இவர்களது பழைய சாசனங்களிற் பெரும்பாலும் 'குலோத்துங்கசோழ கல்லூர்க்கீழ்பால் விரையாதகண்டனிலிருக்கும் வங்கி சாதிபர் என்னும் ஒரு விசேடணம் காணப்படுதலால் இவர் சோணாடுவிட்டு ஈண்டுப்போந்துகண்ட தலைமைநகர் குலோத்துங்கசோழநல்லூர் என்பதாகுமென ஊகிக்கத்தக்கது.

இவ்வூர்ப்பெயரும் குலோத்துங்கசோழனுக்குப்பின்னரே இவர் குடியேற்றம் ஈண்டு உளதாயதுகுறிக்கும். விரையாதகண்டன் என்பதிலுள்ள கண்டன் என்பதும் குலோத்துங்கசோழன் பெயராதல் பலருமறிவர்(தமிழ் நாவலர்சரிதை) என்றார் ஒட்டக்கூத்தரும். கண்டன் பெயரானே கண்டனுர்முதலாகப் பல ஊர்கள் இச்சேது நாட்டு வழங்கப்படுதலுங் காண்க. இக்காலத்துச் சேது பதிகள் தலைநகராகிய முகவைக்கு ஒருகாததுரத்து வையைக்கரையிலே கங்கைகொண்டான் என்னும் பெயரில் ஒருருண்மையினையும் . இச்சேதுநாட்டு வீரபாண்டி, விக்கிரமபாண்டி, வீரசோழன், சோழபுரம் என்னும் பெயர்களாற் சிலவூர்கள் வழங்கப்படுதலையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. இவர் சாசனங்களில் அகளங்கன் என