பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

127

மிதிலைப்பட்டி-சிற்றம்பலக்கவிராயர் தளசிங்கமாலை.
௸யூர்-மங்கைபாகக்கவிராயர் கொடுங்குன்றப்புராணம்.
பொன்னாங்கால்-அமிர்தகவிராயர் ஒருதுறைக்கோவை.
குருகூர்-இராமாநுஜகவிராயர் இரகுநாதக்கோவை.
சக்கரைப் புலவர் திருச்செந்தூர்க்கோவை.
சவாதுப் புலவர் இராசராசேசுவரிப் பஞ்சரத்தினம்.
சோமசுந்தர கவிராயர் திருக்கழுக்குன்றக்கோவை.
மதுரகவி (பெருங்கரை) பல இசைப்பதங்கள்.
சதாவதானம் பெரியசரவணக் கவிராயர் பணவிடு துாது.
முத்துநாயகப் புலவர் கண்ணுடையம்மன் பள்ளு.
சதாவதானம் சிறிய சரவணக்கவிராயர் குன்றைச்சிலேடைமாலை.
சதாவதானம் கிருட்டிணையங்கார் புல்லைமாலை.
பெருங்கருணை, சதாவதானம் முத்தழகரையங்கார் திருக்கோட்டிக்கலம்பகம்.
சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் குருகைக்கலம்பகம்.
வேலாயுதக்கவிராயர்.
முத்துவீரப்பபிள்ளை.
சவ்வூர் வெண்பாப்புலி.

இன்னுஞ் சில புலவர்பரம்பரையினர் கமுதியினும் முதுகுளித்தூரினும், ஊருணிக்கோட்டையினும், மாடம்பூரினும், பிறவிடங்களினும் உள்ளார்கள்.

இவர்களெல்லாம் இச்சேதுபதிகளின் கைவண்மையின் பயனைத்துய்த்துச் சிறந்தவராவர்கள். இச்சேதுபதிகள் போலவே இவ்வரசரபால் மந்திரக்கிழவராயமர்ந்தாரும் செந்தமிழ்ப் புலவரை இனிதோம்பினர். இந்நாடு முழுதுமுள்ள பல்வேறுவகைப்பட்ட நிலங்களின் தகுதியைப் பல்லாற்றானும் ஆராய்ந்துணர்ந்து அவற்றிற்கேற்ற இறையினைச் செவ்வினம் விதிக்கும் ஒழுகு எனப் பெயர் சிறந்த நிலவிறைக்கணக்கை இந்நாட்டிற்குதவிய முத்திருளப்ப்பிள்ளையவர்கள் மதுரகவிகளாற் பெரிதும் சிறப்பித்துப் பாடப்பட்டனர். கி.பி. 1770-ம் ஆண்டில்