பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழகக் குறுநில வேந்தர்கள்


காஷ்மீரச் சரிதம்

சாசியப முனிவர் சிவபிரானை வழிபட்டு இந்நாட்டில் ஓர் நீர்த்தடம் உண்டாக்கினாரென்றும், அதன் கண்ணே பார்வதிதேவியே நீராயொழுகத் தலைப்பட்டனளென்றும், இதனாலிது 'ஸதிஸரஸ்' எனப் பெயர் பெறுமென்றும், இது காசிப முனிவர் வேண்டுதலான் உண்டாக்கப்பட்டு அவர்க்கு மகனாகிய நாகத்தலைவன் நீல நாகனுக்கு உறைவிடம்ஆனதென்றும், இந்நீர்நிலை பின்னால் ஜலோத் பவன் என்னும் பூதத்திற்கு இடனாகியபோது, விஷ்ணு பகவான் பலபத்ரனைக் கொண்டு அலாயுதத்தால் மலையைக் கீறிப் புனலை வடியச் செய்து, அப்பூதத்தைச் சக்கரத்தாற் கொன்றனனென்றும், இதன் பின் நாகர்கள் இங்கே வாழத்தலைப்பட்டனரென்றும் கூறும் (stein Rajatarangini,II, 389 பார்க்க) பில்ஹணர் ராஜதரங்கினியில் கற்பாரம்பத்தே ஸதிஸரஸ் என்ற பெயரால் ஓர் நீர்நிலையிலிருந்த தென்றும் அதிற் பெருகி வழியும் நீரால் நிரப்பப்பட்டு இக்காச்மீரம் உள்ள இடம் மக்கள் வாழ்தற்குரிய நிலமாகாது கிடந்ததென்றும், காசிபர், துருணன் (பிரமின்), உபேந்த்ரன், ருத்ரன் என்னுந் தெய்வங்களை அந்நீர் திலையிலிறங்குவித்து, ஆண்டிருந்த ஜவோத்பவன் என்னும் பூதத்தைக் கொல்வித்து, அந்நீர் வற்றிய தரையில் இந்த ராஜ்யத்தைத் தாபித்தாரென்றும் (ரா. த.| 25,26,27) இந்நிலம் ஸ்திஸரஸ்ஸைக் குடையாகவும், அதனின் றொழுகிவரும் விதஸ்தா என்னும் நதியைக் (Jhelum) காம்பாகவும் கொள்ளப்பட்ட நாகர் தலைவனான நீலநாகனாற் காக்கப்படுவதென்றும், அவன் வாழ்வதனால் இந்த ஸ்திஸ்ரஸ் நீல குண்டம் எனப்படுமென்றும் (ரா.த. 1. 28) விளங்கவுரைத்தனர். இந்த விதஸ்தாநதி நீலநாக குண்டத்தில் உற்பத்தியாதல் பற்றி இதனை நீலன்மகவாகக் கூறுவதுமுண்டு. (v:91) இந்நாட்டவர் இங்குள்ள நீர்நிலைகள் பலவற்றையும் ஒவ்வொரு நாகத்திற்கு உறை