பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ரா. இராகவய்யங்கார்

45

________________

45 ரா. இராகவய்யங்கார் வழங்கப்படுதல் அவ்வந்நீர் நிலைக்கு ஆதிதெய்வமாகிய நாகத்தைப் பற்றுயதென்று முன்னரே காட்டினேன். இவற்றுட் பத்ம நாகம் என்பது வேளூர் நீர் நிலையைக் குறிப்பதென்றுங் காட்டினேன். ஆவிக் கோமான் பதுமன் என்பது நீர் நிலைக்குத் தலைவனான பதும நாகனைக் குறித்ததாம். இவ் வேள்புலத்தினின்று தன்னாடு புக்க மக்கள் தம் பழைய நாட்டை மறவாமல் தம் நீர்நிலைப் 'நெகாத்தங்கா பாைந்து வாழங்கியது உன் ! - 1,57. நா கேக்கள் தாத்த்க-:'; 1.4a -S ary) துே), - 3ம். இவ் வ னர கட - தள மாந்தானrதெ.. செ. 3-சர்ட நரை எனவுப் பூ டி நாகர் நகர் எனவும் வருவனவற்றாற் கண்டு கொள்க. வேளாளரைப் பெருக்காளர், காராளர் என வழங்கலும், கச்மீர நீர் நிலைக்கும், மேகத்திற்குந் தலைவராகக் கருதிய நாகர் வரலாற்றொடு பொருந்தல் நோக்கிக் கொள்க. மேற்காட்டிய ‘‘அருந்திறவணங்கிளு வியர்" {சிறுபாண் 86) என்றதும் அரிய வலியையுடைய தெய்வத்தன்மையையுடைய ஆவியர் எனப் பொருளாதல் காண்க. தெய்வத்தன்மையையுடைய ஆவி என்றது நாக தேவதையறையும் நீர் நிலையா தல் பற்றியென்று கொள்க. வேள் குலத்தவன் நீர் நிலைப் பெயரே தன் பெயராகக் கொண்டனன் என்க. - இனிப் பேகனை வையாவிக்கோ எனப் புறநானூறு தொகுத்தார் வழங்கிக் காட்டுவார். இதன் கண் உள்ள வையாவி என்பது வைவாபி என்பதன் மரூஉ ஆகும். வைவாபி என்பது வடமொழியில் உலர்ந்த குளம் என்று பொருள்படும். பதும நாகனுக்கு உறைவிடமாகத் தரங்கினி கூறிய பத்மஸரஸ் முதலில் ஷடங்குல நாகனாற் கைப்பற்றப்பட்டிருந்ததென்றும் அவன் அருகிலுள்ள நாட்டுப் பெண்டிரை வவ்விச் செல்வது கண்டுநாகர் தலைவனான நீலநாகன் அவனைத் துரத்தி விட்ட என் என்றும், அவன் ஒழிந்த பின்னர் அந்நீர் நிலை உலர் து நல்ல நிலமாயிருந்ததென்றும், அங்கே விசவசவா என்னும் அரசனொருவன் சந்த்ரபுரம் என்ற