பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 57 துள்ள பிரயாகைக்குச் சிறிது தூரத்துள் யமுனைக் கசையி லிருந்ததென்பர். - இப்போது கோசம் என்ற பெயரிலுள்ள சிற்றுார் இப் பெரு நகரிருந்த தலமாகுமென்பர். (கன்னிங்ஹாம். பூகோளம் பார்க்க) கோசாம்பி நகாம் வான்மிகத்துங் கூறப்பட்டுள்ளது. பத்தநம் கோசகாராணாம் ... மார்க்க்யத் பிஸ்ததஸ்தத: ராமஸ்ய தயிதாம் பார்யாம் ஸீ தாயாம் தசரதஸ் நுஷாம் இதனாலிந் நகரின் பழைமையறியலாம். இத்தென் னாட்டுத் தமிழ்ப் பாடல்களில் ஒரு சில வத்தவர் கோனைப் பற்றி வருவன கேட்கப்படுதலான், வத்ஸ் நாட்டுக் கோசத் தினின்று இத்தென்னாடு புக்குச் சீருஞ் சிறப்பும் பெற வாழ்ந்த வீரர் பலருண்டென்றுய்த் துணரப்படுவது. தம் வத்ஸ்நாடு பஞ்சம் பட்டும், பூகம்ப மெய்தியும் தடுமாறிய காலத்து, இவர் இத்தென்னாடு புக்கு வதிதவரென்று கொள்ளலாம். தென்னாட்டில் வாழ்ந்தவர் மரபில் வ்ந்தவர் தலைவனைப் பற்றிய நூல் வச்சத் தொள்ளாயிரம்' என்று பெயர் பெறும். வச்சம் என்பது வத்ஸ தேசமாகும். நூற் பாடலை வீரசோழிய வுரைகாரர் பெருந்தேவனார், தொகை மொழிக்கு உதாரணமாகக் காட்டி விளக்கிக் கூறியவாற்றான் இவ்வுண்மை அறியப்படுவது. அவர், 'வேட்டொழிவ தல்லால் வினைஞர் விளைவயலுட் டோட்ட கடைஞர் சுடுநந்து-மோட்டாமை, வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் தீளங்கோவை இன்புறுத்த வல்லமோ யாம்' -- (வீரசோ. அலங். 11. மேற்) இதனுட் சிறப்புடையளாகிய தலைமகளை இகழ்ந்து தலைமகன் சிறப்பில்லாத பரத்தையர் மாட்டு நிகழா நின்றமையின், நாட்டுக் கடைஞ ருள்ளார் சிறப்பில்லாத