பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 63 வதும் பொருந்தும். அங்ஙணமாயின் இப்பெயர்க் காரணம் வேறே ஆராயப்படும். காச்மீர தேச சரித்திரமாகிய இராச தரங்கினியில் நட்பிற் பிழையாமைக்கு அந்நாட்டு மக்கள் கோசம் என்ற ஓர் சூள் முறை (சபத கர்மம்) மேற் கொண்டொழுகியது கேட்கப்படுவது, இவ்வுண்மையை. 'இழிசின னாகிய காசன் அரசனுடைய ஐய நடுக்கம் போக்க உதிரத்தால் நனைந்த தோலில் இன்று கோசமுறையில் ஆணையிட்டனன்’ (8 ஆந்தரங்கம் 3005) எனவும் 'இராசத் துரோகிகள் நம்முட் கோக முறையைச் செய்து அரசனுயிரைக் கவர வுடன் பட்டனர்” (8- 280) எனவும், 'சோமபாலன் கோச முறையில் ஆணை யிட்டும் அரசன் படை யெடுப்பைக் கவனியா திருந்தான்” * (8. 2222) எனவும் 'அரசனுந் தாமரனும் வாளொடு உதிர நனைந்த தோலினின்று கோச முறை யிலாணை யிட்டனர்' 'ஷ. 6 3.26) எனவும் வருதலான் நன்குணரப் படுவது. இஃது அந் நாட்டுத் தொன்று தொட்ட வழக்கமாகும். இவ்வாறு நட்பிற் பிழையாத பெருவாய்மைக்குக் கோசமுறையை மேற்கொள்பவராதலின் இவர் கோசர் எனப்பட்டாரெனின், இத் தென்னாட்டுக் கோசரியல்பிற்கு அது நன்கு பொருந்து மென்க. இக் கோச முறை தனியேயும், வஞ்சினங் கூறி மேற் கொள்ளும் இடத்தும் உண்டென்பது ஷ 7.746 ஆம் சுலோகத் தானறியப் படுவது; இஃது இக் கோசர் தலைவி அன்னி மிஞலியென்பாள். "சினத்திற் கொண்டபடிவ