பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை


மகாவித்துவான் ரா. இராகவய்யங்கார்

(1870-1946)

இக்கட்டுரைத் தொகுதியின் ஆசிரியரின் முன்னோர்கள் காஞ்சிபுரம் ஶ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள திருப்புட்குழியில் வாழ்ந்தவர்கள். இவ்வூர் பல நூற்றாண்டுகள் வடமொழி, தென்மொழி வல்ல புலவர்கள் வசித்த இடம். இவர்களில் ஒருசிலர், வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரிக்குக் குடியேறினார்கள். நைத்ருவ காசிப கோத்திர வைணவ அந்தனர்களுக்கு அத்தலத்து எம்பெருமானார் ஜீயர் மடாதிபத்யம் உரியதாகும். கட்டுரை ஆசிரியரின் குடும்பத்தார் பின் சேதுநாடு வந்து தமிழ், வடமொழி வல்லவராய்த் திகழ்ந்தனர்.

1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் பிறந்த ஆசிரியரின் பெற்றோர் இராமாநுஜ ஐயங்கார்-பத்மாசனி ஆவர். பிறந்த ஊர் சிவகங்கை அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டை. இளமையிலேயே தந்தையை இழந்து மாமா சதாவதானம் முத்துசுவாமி ஐயங்கார் ஆதரவில் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். தமிழார்வத்தால் உந்தப்பட்டு பள்ளிப்படிப்பை நடுவிலே விட்டு, தமிழை ஆதரிக்கும் வள்ளல்களிடம் தம் தமிழறிவைக் காட்டி அவர்களால் ஆதரிக்கப்பெற்றார். மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். திருமணத்துக்குப்பின் திருச்சி தேசிய உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக