பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 தமிழகக் குறுநில வேந்தர்

 இனி இத் திரையனைத் "தொண்டையர் மருக” என்றதனால் இவன் பிறந்த குடி தொண்டையர் குடியெனப்படுதல் அறியலாம். நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகார இறுதியில் (தொல். எழுத். 483). தொண்டைமானாடு தொண்டைநாடு என மரீஇயிற்றெனக் கொள்ளுதலின் முதற்கண் தொண்டை என்பது குடிப் பெயராகவிருந்து அப்பால் அக்குடியின் ஆட்சியுட் பட்டதனால் நாட்டிற்குப் பெயராயிற்றென்று துணிதற்கு அவருரை இடந்தருவது காண்க. இம்முறை சேரநாடு, பாண்டி நாடு, சோணாடு என்பனவற்றிற்கும் ஒத்தல் நோக்கிக்கொள்க. இதனாற் றொண்டகம் என்னும் நாட்டின் பெயர் தொண்டையென்று மரீஇயிற்றென்று கூறுதல் அவர்க் குடன்பாடன்மை தெரியலாம். இவ்வுருத்திரங் கண்ணனாரும்,
  "உரவு வாட் டடக்கைத் 
              தொண்டையோர்”

என்றதனாற் பெருவீரக் குடிப்பெயராகவே கருதல் காண்க.

  நந்திக் கலம்பகத்திற் பல்லிடத்தும் நந்தி பல்லவற்குக் கோவையாகிய தொண்டை மாலையே கூறுதலான் அம் மாலையா லிக்குடி இப்பெயர் பெற்றதாமெனின் அது அந் நூலுட் டொண்டையோன் தொண்டை (66) என்றதனால், தொண்டைக் குடியினன் தொண்டைமாலை என்று கொள்ள வைத்ததனோடு மாறுபடுதல் கண்டு உண்மை தெளிக. தொண்டைமாலை யுடையோனுடைய தொண்டைமாலை யெனக் கூறற்காகாமை தெளிக. இப் பல்லவர் பண்டுவதித நாடு கங்கைக்கரைக்கு அடுத்தது என்று தெரிதலால் இவர் தென்னாட்டுப் போந்ததன் பின்னரே குடிப்பெயர் பெற்றனர் என்பது பொருந்தாதாம்.
  சிந்தாமணிப் பதுமையார் இலம்பகத்துப் பலலவதேயம் கங்கைக் கரைக்கு மூன்று காதத் துள்ளதாகக் கூறப்