பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

ஆடவர்கள் உடலுரமும், பெருமிதமான தோற்றமும், நுண்ணறிவும், உற்சாகமும், சலிப்பற்ற தன்மையும், கூரிய பார்வையும், பிறரை அடக்கியாளும் நம்பிக்கையும் இயற்கையாகவே பெற்றிருக்கின்றனர். இவர்கள் தங்கள் மயிரை வெட்டுவதுமில்லை; சிரைப்பதுமில்லை. எப்போதும் சடாமுடியோடு காட்சியளிப்பார்கள். பெண்கள் அழகிய தோற்றமுடையவர்கள். ஆனால் அறிவில் குறைந்தவர்கள். ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இவர்களிடம் உண்டு.

வீடுகள் :

தோடர்கள் வாழும் சிற்றூருக்கு 'மண்டு' என்று பெயர். ஒவ்வொரு மண்டுவிலும் நான்கு அல்லது ஐந்து வீடுகளே உள்ளன. இவ் வீடுகள் அரை வட்ட வடி வமானவை; பீப்பாயை நீள வாக்கில் குறுக்காக அறுத்துக் கவித்து வைத்தாற்போல் தோன்றுகின்றன. மரப் பலகைகளாலும், சட்டங்களாலும் இவ் வீட்டை அமைத்து, மேலே புற்களையும், தழைகளையும் போட்டுக் கூரை வேய்கிறார்கள். வீட்டிற்கு முன்னால் மட்டும் ஒரே ஒரு வழியுண்டு. அது குறுகலானது ; இரண்டடி சதுர அளவுள்ளது. வீட்டிற்குள் செல்வோர் குழந் தைகளைப் போல் நான்கு காலில் தவழ்ந்துகொண்டே செல்ல வேண்டும். வீட்டிற்குள் படுத்துறங்குவதற்கென்று மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். காற்றும் கதிரவன் ஒளியும் உள்ளே மருந்துக்குக்கூடக் கிடையா. வீட்டைச் சுற்றி நாற்புறச் சுவர் அமைந்திருக்கும். எருமைகள் உள்ளே நுழைவதற்கென்று தனி வழியொன்று அச்சுவரில் இருக்கும்.

மொழி :

தோடர்கள் பேசும் மொழி, அங்குள்ள மற்ற பழங்குடி மக்களின் மொழிகளினின்றும் மாறுபட்டிருக்