பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
முன்னுரை

“ஒரு சொற்றாெடர் எழுதுவதற்கு நூறு நூல்கள் படித்தேன். ஒரு வருணனை எழுதுவதற்கு நூறு கல் சுற்றுப் பயணம் செய்தேன்” என்று குறிப்பிட்டான் ஆங்கிலச் சொல்லேருழவன் மெகாலே. இதைப் படித்தவுடன் என்னையறியாமல் ஒருவகை உள்ளக்கிளர்ச்சி பெற்றேன். ‘நாமும் ஏன் தமிழகத்தைச் சுற்றிவரக்கூடாது?’ என்ற எண்ணம் என் உள்ளத்தில் ஏற்பட்டது. முதன் முதலாக இயற்கை எழில்மிக்க தமிழகத்து மலைகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். இந்த முடிவு என் உள்ளத்தில் கருக்கொண்ட பொழுது, இப்பயணத்தை ஓர் இன்பப் பயணமாகவே மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் புறப்படும் நேரத்தில் என் உள்ளம் மாறிவிட்டது. இப்பயணத்தைப் பயனுள்ள வழியில் செலவிட்டால் என்ன என்று எண்ணினேன். அதன் விளைவே இந்நூல். ஆனால் முதலில் என் உள்ளத்தில் கருக்கொண்ட குறிக்கோள்