பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர்குலப் புலவர்கள் 9盘 பைந்தமிழ் வளர்த்த பெருமை, பாண்டிய நாட்டுத் தலை நகராம் மதுரைமா நகர்க்கு மட்டுமே உரிமையுடைத்தன்று. அப்பெருமையில் எமக்கும் பெரும்பங்கு உண்டு எனப் பறை சாற்றுவதுபோல், பத்திற்கும் மேலான புலவர் பெருமக்க ஆாப் பெற்றிருந்த பெருமைசால் பேரூராம், சேரநாட்டின் தலைநகராம். சிறப்புமிகு கருவூரிலும், கோசர்குலப் புலவர் ஒருவர் காட்சி அளிக்கிரு.ர். - - காதல் கொண்டு கடிமணம் புரிந்துகொண்டு இல்லற மாம் நல்லற வாழ்க்கையில் இன்பம் கண்டு வாழ்ந்து வங்தார் கள் இளங்காதலர் இருவர்: தோன்றின் புகழொடு தோன் Tபல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம்; தோழி! நிரைதார் மார்பன், நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின் இயன்ற அணியன், இத்தெரு இறப்போன், மாண்தொழில் மாமணி கறங்கக், கடைகழிந்து காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஒடும் பூங்கண் புதல்வனை நோக்கி, நெடுந்தேர் தாங்குமதி, வலவ! என்று இழிந்தனன், தாங்காது மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவனப் r புல்லிப், 'பெரும! செல்இனி அகத்து எனக் கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், தடுத்த மாநிதிக் கிழவனும் போன்ம் என மகனெடு தானே புகுதந்தோனே யான் அது , r படுத்தனன் ஆகுதல் நாணி, இடித்து இவன் . ... கலக்கினன் போலும் இக் கொடியோன் எனச் சென்று அலேக்கும் கோலொடு குறுகத் தலைக்கொண்டு இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்ம்னைப் பயிர்வன போலவந்து இசைப்பவும், தவிரான் கழங்காடு ஆயத்து அன்று நம் அருளிய பழங்கண்ணுேட்டமும் நலிய - な அழுங்கினின் அல்லனே அயர்ந்ததன் மணனே'(அகம். 86).