பக்கம்:தமிழக ஆட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தமிழக ஆட்சி



‘ படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.”

  • கெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; யானுயிர் என்ப தறிகை வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே ‘

என்று புறநானூற்றுப் பாடல் புகல்கின்றது.”

இதல்ை குடிகளுக்கு அரசனே உயிர் என்று பண்டை மக்கள் கருதினர் என்று கொள்ளலாம். அரசனிடம் கல்வி யறிவு, அஞ்சாமை, நுண்ணறிவு, சோம்பலின்மை, செயல் படு திறமை முதலிய பண்புகள் எதிர்பார்க்கப்பட்டன.

“ அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. ‘

“ தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலளுள் பவர்க்கு. ”

‘ மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு. ”

‘அரசன் ஆட்சி முறைக்குரிய அறத்தில் தவறலாகாது: அறமல்லாதவற்றை நீக்கவேண்டும்; வீரத்தில் மானவுணர்ச் சியோடு இருத்தல் வேண்டும்; காண்பதற்கு எளியவளுய்க் கடுஞ்சொல் கூருதவளுய் இருக்கவேண்டும்; இனிய சொற். களைப் பேசவேண்டும்; பொருள் வரும் வழிகளே மேன்மேலும் பெருக்கவேண்டும்; வந்த பொருள்களைச் சேர்க்க வேண்டும்: சேர்த்தவற்றைக் காக்க வேண்டும்; காத்தவற்றைப் பல துறைகளுக்காக வகுக்க வேண்டும் வகுத்தவற்றை முறைப் படி செலவு செய்யவேண்டும்; நீதிமுறை தவருது குடிகளைக் காக்கவேண்டும்; புறங்கூறுவோரின் சொற்களைப் பொறுமை

1. செ. 186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/25&oldid=573551" இலிருந்து மீள்விக்கப்பட்டது