பக்கம்:தமிழக ஆட்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தமிழக ஆட்சி



இங்ஙனம் எழுதும் அரசாங்கத் துறையின் தலைவன் திருமந்திர ஒலை நாயகம் என்பவன்.

விடையில் அதிகாரி : இவன் அரசாங்கத் தொடர்பான கேள்விகட்கு விடை எழுதும் அதிகாரி. இவனுக்குக் கீழ் ஒரு. துறை இருந்தது.

ஆணத்தி : இங்ஙனம் எழுதப்படும் விடைகளை அனுப் பும் துறைக்குத் தலைவன் ஆணத்தி என்பவன்.

அரசாங்க ஆணைகளையும் செப்பேடுகளையும் எழுதத் தக்க திறமையாளர் அடங்கிய துறை ஒன்றும் இருந்தது. கோவில் களே மேற்பார்க்கும் அதிகாரிகளும் இருந்தனர்.

கிலவரி பற்றிய துறைகள்

புரவுவரித் திணைக்களம் என்பது ஒர் அரசாங்கப் பிரி வாகும். இது நிலவரி வசூலிக்கும் துறை என்று கூறலாம். இத்துறை பத்துப் பிரிவுகளைப் பெற்றிருந்தது. அவை :(1) புரவு வரித் தி னை க் களம், (2) வரிப்பொத்தகம், (3) புரவு வரித் திணைக்களக் கண்காணி, (4) முகவெட்டி, (5) தெரிப்பு, (6) தரவு சாத்து, (7) பழ நி யா யம், (8) வரியிலீடு, (வரியேடு), (9) வரிப் புத்தகக் கணக்கு, (10) பட்டோலே என்பன.

(1) வரி வசூலிக்கும் முழுத்துறையும், நிலவரித். தொடர்பான எல்லாவற்றையும் முதலில் கவனிக்கும் துறை யும் சேர்ந்த ஒன்றே புரவு வரித் திணைக்களம் என்று சொல் லலாம்.

(2) afಹ கணக்கு வைத்துள்ள துறை வரிப்பொத்தகம் எனப்பட்டது.

(3) வரிக் கணக்கைப் பரிசீலனை செய்யும் துறை புரவு வரித் திணைக்களக் கண்காணி என்று பெயர் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/65&oldid=573583" இலிருந்து மீள்விக்கப்பட்டது