பக்கம்:தமிழக ஆட்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

85



பெயர். இவ்வகை ஒப்பந்தங்கள் பண்டை வழக்கத்திற்கும் ஆட்சிக்கும் மாறுதலாகவும் இருக்கலாம். அவ்வாறு உலக ஒழுக்கத்திற்கும் மாறுபட்டிருப்பினும், இசைவு சபையாருக்குத் தெளிவு பெறுத்தப்பெற்றால், அதுவே தீர்மானிக்கப்படும். ஆட்சிக்கு விரோதமென் று ஒரு இசைவு வழக்கைத் தள்ளிவிட மாட்டார்கள். இசைவு வழக்கு என்பது இருவர் ஒப்பந்தத்தினப்பற்றிக் கோரும் தீ ர் மா ன த் ைத உட்கொண்டதாம், அவ்வழக்குகளைத் 35mgár causes bascó on agreement grassroot offlaw முறை சொல்லும். அவ்வாறு எழுதிக் கொடுக்கும் இசைவு ஒலைகளுக்குச் சாட்சிக்காரர்கள் கையைழுத்துப் போடுவதும் வழக்கம். சாட்சிக் கையெழுத்துப் போடுப வர்க்கு மேலெழுத்திடுவோர்’ என்று பெயராம். எழுதிக் கொடுத்தவர் இறந்து பட்டால், சாட்சிக்காரர்களின் கையெழுத்தையும் எழுதிக்கொடுத்தவரின் கை ெயாப் பத்தையும் வேறு சாசனங்களேயும் கொண்டு, அவை அவையே என்று நிச்சயித்துத் தீர்ப்புக்கொடுப்பார்கள். அவ்வாறு இறந்தோர் கை யெ ழு த் துக் க ளே அவர் களுடையனவாம் என்று நிச்சயிக்கிறதற்கு, அவர்களு டையன என நிச்சயமாய் அறிந்த வேறு கையெழுத்து ஒலேகளே வரவழைத்து, இரண்டு கையெழுத்துக்களையும் ஒப்பு நோக்கி நிச்சயிப்பதும் தீர்மானிப்பதும் அந்நாள் வழக்கு விசாரிக்கும் முறைகளில் ஒன்றாகும். இதல்ை Comparison of handwriting and signatures arsirip gli Strair ஆங்கில நீதி முறைக்காரர் கொண்டுள்ள விதிகள், பல நூற்றாண்டுகளின் முன் அக்காலத்தே தமிழர்கள் கையாண்ட விதிகளாக நாம் அறிகிருேம். இவ்வாறு கையெழுத்துக்கள் ஒத்துப் பார்ப்பதற்காக அந்த ஊர் களில் உள்ளவர்களது கையெழுத்துக்களையும் கையொப்பங் களையும் தனியாக ஊர்ப்பொது அரசாங்க நீதிச்சாலைப் பாதுகாப்பில் காப்பாற்றி வைக்கும் வழக்கமும் இருந்தது. இது இந்நாள் பத்திரப் பதிவு (Registration) இயலார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/92&oldid=573610" இலிருந்து மீள்விக்கப்பட்டது