பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 'வளங்கெழு கோசர் விளங்குபடை” (அகம்.205) 55 எனவும் “வென்வே, விளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின ரெறிந்த வகலிலை முருக்கிற் பெருமரக் கம்பம் போல' (புறம். 169) எனவும் "வலம்புரி கோசரவைக் களத்தானும்' (புறம்.283) எனவும் கூறுதலான் இவர் வேற்படையான் வென்றியெய்திய பெருந் தேர் வீரரென்று தெரியலாவது. இரும்பிடம் படுத்த" என்புழிப் பழையவுரைகாரர் இருப்பினை வேலென்றே கொண்டார். 'வலம்புரி கோசரவைக் களம் என்றதனாலிவர் தந்தம் படை வெற்றியைக் காட்டவல்ல போரவைக் களம் வைத்துப் போற்றின ரெனத் தெரியலாம். இவர் நன்றல் லாத காலத்தும் தம்முடைய நட்பிற் கோடாதவரென்பதும், நெடுங்காலஞ் சென்றேனும் கருதியது முடிக்கும் பெரிய சூழ்ச்சியையுடையவரென்பதும், தமக்கே சிறப்பாக வாய்மையை விடாது போற்றிப் புகழ் படைப்பவரென்ப தும், தம்மகத்துப் புக்கவறியரை நன்று தாங்கும் பேரளி யுடையவ ரென்பதும் பிறவுஞ் சான்றோர் பாடல்களானன் கறியக் கிடப்பனவாகும். “நன்றல் காலையு நட்பிற் கோடார் சென்று வழிப்படு உந்திரிபில் சூழ்ச்சியிற் .. கோசர் உ “ஒன்று மொழிக் கோசர்" (அகம்.113) எனவும் (அகம்.196) எனவும் (அகம். 25) எனவும் வாய் மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர்" 'கோசர் நன்மொழிபோல வாயாகின்றே” (குறுந். 15) எனவும்