பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு; செல்லூர் ஆதன் எழினி வேறு; எழினி ஆதனுக்குரிய வாட்டாற்றின் கண் கோசர், குடித்து விட்டுக்குரவை ஆடி யது தவிர்த்து, எழினி ஆதனுக்கும் கோசர்க்கும் எவ்வித உறவும் இல்லை; பகையும் இல்லை : ஆகவே, கோசர், வாட்டாற்று எழினி ஆதன் மார்பில் வேல் எறிந்து அவனைக் கொன்றனர், என்ற திருவாளர் பிள்ளை அவர்கள் கூற்று உண்மைக்கு மாறானது : என உணர்க. 130