பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம் வந்து சேர்ந்த பாண்டியர் படையைக் கண்ணுற்ற பகைவர்கள். அப் பாண்டிப் படைக்கு நடுவே, கோசர் படை பழையன் கீழ் அணிவகுத்து நிற்பதைக் கண்டு வியந்து கலக்க முற்றனர். வாள் வேல் முதலாம் படைக் கலங்கள் ஒளி வீச உரம்மிக்கு நிற்கும் அக் கோசர் படை யையே முதற்கண் வெற்றி கொள்ளுதல் வேண்டும். ஆனால், அக் கோசர் படையை எதிர்த்துப் போரிடுவது தம்முள் எல்லார்க்கும் இயலாது. வெள்ளம் போல் பரந்த பெரும் படையும்'. நனி மிகச் சேய பகை நாடுகளுக் கெல் லாம் சென்று போரிட்டு வென்ற போர்ப் பயிற்சியும், காற் றெனக் கடுகிப் பாயவல்ல குதிரைப்படையும், கணக்கற்ற களிற்றுப் படையும் உடையார் மட்டுமே அப்படைமுன் செல்லுதல் இயலும் என உணர்ந்து தம் எழுவருள் அத் தகுதி முற்றவும் வாய்க்கப் பெற்றவன் கிள்ளிவளவன் ஒரு வன் மட்டுமே எனத் தேர்ந்து கோசரோடு போரிடும் பணி யினை அவன் பால் ஒப்படைத்தனர்." கோசரோடு, போரிடும் பெருவாய்ப்புத் த ன க் கு க் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியால், கிள்ளியும் தன் நாற்படை யைக் கோசரின் அணி மீது ஏவினான். வந்திருந்த பகைவர் படை ஏழனுள்ளும் அளவாலும், ஆற்றலாலும் பெரியது கிள்ளியின் படை, அப்படையோடு போரிடுவதே தம் பேராண்மைக்குப் பெருமையாகும், அவ் வாய்ப்பினை அளிக்க மாட்டானா பாண்டி மன்னன் என எண்ணி யிருக்கும் நிலையில், வெள்ளம்போல் பரந்த கிள்ளிப்படை தம் படை வரிசை நோக்கி வருவது கண்டு மகிழ்ந்தார்கள், கோச வீரர்களும் அது தனக்குக் கிடைத்த பெறற்கரிய பேறு எனக் கருதி பெருமிதம் கொண்டான் பழையன் உள்ளத்தில் அவ்வுணர்வு மிகவே கோசர் உரம் மிகுந்து போராடினர், அதனால் போராடத் தொடங்கிய சிறிது பொழுதிற் கெல்லாம் சோணாட்டுப் படையை வென்று துரத்தி விட்டார்கள் கோசர். 41