பக்கம்:தமிழன் இதயம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் நன்றி மறந்தவன் சண்டாளன் நயமுரை வஞ்சகன் சண்டாளன் கொன்று சுகித்தவன் சண்டாளன் கோப மிகுந்தவன் சண்டாளன் கன்று நலிந்திடப் பாலெல்லாம் கறந்து புசித்தவன் சண்டாளன் ஒன்றுந் தெரியேன் " ஏழை" என்றிடும் ஒன்றே என்குறை அதற்காக (நானோ ) கள்ளைக் குடிப்பவன் சண்டாளன் காமத் தலைபவன் சண்டாளன் கொள்ளை அடிப்பவன் சண்டாளன் கூடிக் கெடுப்பவன் சண்டாளன் ' அள்ளித்தெரிக்கா'ப் பணக்காரன் ஆபத் துதவான் சண்டாளன் வெள்ளைத் துணியொன் றில்லாமல் வேலை செய்வேன் அதற்காக (நானோ) தெய்வ மிகழ்ந்தவன் சண்டாளன் தீனரைக் கெடுத்தவன் சண்டாளன் பொய்யுரை பேசிப் பிறர் கேடே புரிந்து பிழைப்பவன் சண்டாளன் ' ஐய அடைக்கலம்' என்றோரை ஆதரிக்காதவன் சண்டாளன் வெய்யில் மழை யென்றில்லாமல் வேண்டிய செய்வேன் அதற்காக (நானோ) ஆலயத் துள்ளே அபசாரம் அறிந்தே புரிந்தவன் சண்டாளன் கூலியை மறைத்தவன் சண்டாளன் கோள் சொலிப் பிழைப்பவன் சண்டாளன் 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/116&oldid=1449916" இலிருந்து மீள்விக்கப்பட்டது