பக்கம்:தமிழன் இதயம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் வேலியைக் கடந்தே பிறன் பயிரை வேண்டுமென் றழித்தவன் சண்டாளன் காலையும் மாலையும் இல்லாமல் கஷ்டப் படுவேன் கள்ளமிலேன் (நானோ) வட்டி பெருக்கி ஏழைகளின் வாழ்வு கெடுத்தவன் சண்டாளன் பட்டினி எளியவர் ஆசையுடன் பார்த்திட உண்பவன் சண்டாளன் ஒட்டிய வழக்கில் பணத்திற்காய் ஓரஞ் சொன்னவன் சண்டாளன் அட்டியில்லாமல் சொன்ன தெல்லாம் அடியேன் கேட்டேன் அதற்காக (நானோ ) தானங் கொடுப்பதைத் தடுப்போனும் தவத்தைப் பழிப்பவன் சண்டாளன் மானங் கெடுத்தவர் சோறுண்டு வயிறு வளர்ப்பவன் சண்டாளன் கானுங் கரடும் உங்களுக்காய்க் கல்லிலும் முள்ளிலும் பாடுபடும் ஏனிங் கென்னைச் 'சண்டாளன்' என்பது? சரியோ உங்களுக்கே (நானோ) 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/117&oldid=1449914" இலிருந்து மீள்விக்கப்பட்டது