பக்கம்:தமிழன் இதயம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் எத்தனை நிறங்கள் உருவங்கள்! எல்லா வற்றையும் எண்ணுங்கால் அத்தனையும் தர ஒருகர்த்தன் யாரோ எங்கோ இருப்பது மெய். அல்லா வென்பார் சிலபேர்கள் அரன் அரி யென்பார் சிலபேர்கள் வல்லான் அவன்பர மண்டலத்தில் வாழும் தந்தை என்பார்கள் சொல்லால் விளங்கா ' நிர்வாணம்' என்றும் சிலபேர் சொல்வார்கள் எல்லா மிப்படிப் பலபேசும் ஏதோ ஒருபொருள் இருக்கிறதே! அந்தப் பொருளை நாம் நினைத்து அனை வரும் அன்பாய்க் குலவிடுவோம் எந்தப் படியாய் எவர் அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன ? நிந்தை பிறரைப் பேசாமல் நினைவிலும் கெடுதல் செய்யாமல் வந்திப் போம். அதை வணங்கிடுவோம் வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம். 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/14&oldid=1448506" இலிருந்து மீள்விக்கப்பட்டது