இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
அதேபோல் அறிஞர் தடுத்தும் உடன் கட்டையேறத் துணிந்த பூதப்பாண்டியன் மனைவியின் செயலும் இதனை வலியுறுத்தும். அலுத்து வந்த ஆருயிர்க் கணவனுக்கு அறுசுவை உணவளித்து மகிழ்வது மனைவியின் முதற் கடமையாகும்.
- “நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டு”
- "குட்குரல் மலிந்த கொழுந்துவை யடிசில்”
- "ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி"
- "மோட்டிரு வரா அல் கொட்டுமீன் கொழுங்குறை”
போன்ற அடிகள் அவர்களது அட்டில் தொழில் வன்மையைக் காட்டும். தாம் சமைத்ததை, "இனிது இனிது” எனக் கணவர் சுவைத்துண்பதைக் கண்டு அம்மகளிர் மட்டிலா மகிழ்ச்சியடைவர் என்பதை,
- "தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
- "இனிதெனக் கணவன் உண்டலின்
- "நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்னுதல் முகனே”
குறு. 167
என்ற குறுந்தொகையடிகள் எடுத்துக் காட்டும் இத்தகைய உண்மையன்யினாலே, வன்மைமிக்க ஆடவரையும் மென்மை மிக்க மகளிர் பிணித்து விட்டனர்.
- “மென்மை மகளிர்க்கு வணங்கி வன்மையின்
- ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை”
புறம்.68
என்று சோழன் நலங்கிள்ளியைப்பற்றிப் புறநானூற்றில் கோவூர் கிழார் கூறுவர்.
- “ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
- நண்ணாரும் உட்கும்என் பீடு”
குறள் 1088