178 வாழ்க்கைக்குத் தேவையற்றனவற்றைக் கற்றப் பெற்ற பாடம் இது. இப்பாடத்தை அன்றே திருவள்ளுவர். கற்க, கசட்றக் கற்பவை என்று தம் மக்கட்குப் புகட்டினர். ைேர ஒழித்துப் பாலைப் பருகும் அன்னம்போல் நன்மை அமைந்தவற்றையே ஆராய்ந்து படிக்கவேண்டும் என்பதை, - -தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழிய பாலுண் குருகில் தெரிந்து என்னும் காலடியாரால் நன்குணரலாம். பல நூல்களுள் நல்ல நூல்களைக் கற்றலே சிறப்பு என்னும் கருத்தமைந்த பல்லவையுள் நல்லவை கற்றலும்...தலை என்னும் திரிகடுகப் பாடலும் இவ்விடத்திற்குப் பொருத்த மானதாகும். எனவே இன்றைய கல்வி முன்னேற்றங் களுள் பெரும்பாலன அன்றைய அன்றைய தமிழன் கண் டவையே என்பது இனி புலகுைம். V. பயிற்றும் முறை (போதன முறை) 1 . பேச்சுப்பயிற்சி பயிற்றும் முறையில் இன்றும் பல புதுமைகள் கையா ளப்படுகின்றன. இவற்றின் சாயல் ஏதேனும் அக்காலத் தில் இருந்ததா என்று காண்போம். மாண்வர்கள் ஆரம்பத்தில் கொச்சையான பேச்சுச் குழ்கிலேயில் பழகியிருப்பர். எனவே அவர்கள் பள்ளிக் கூடம் வந்ததும் தாய்மையாகவும் தெளிவாகவும் பேசச் செய்ய வேண்டும். இல்லையெனில் கொச்சையாகவே பேசு வர் : எழுதுவர். எனவே ஆரம்பத்தில் அவர்கட்கு முழு 179 உருவத்துடன் உச்சரிக்கக் கற்பிக்க வேண்டும். அதன் பின்பே வாசிப்பும் எழுத்துப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும் என்று மேலேகாட்டுப் போதன முறை வல்லுகர் கள் கூறுகின்றனர். அவர்களுள் ஒருவரான Greening என்பவர் ' எவ்வளவுக் கெவ்வளவு பேச்சு சுத்தமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு வாசிப்பும் எழுத்தும் சுக்தமாகவும் இருககும் ' என்று கூறுகின்ருர். இத அனயே நம்நாட்டு மாண்டிசரியார் "சித்திரமும் கைப்பழக்கம் செங்தமிழும் காப்பழக்கம்' என்ருெரு தனிப்பாடலில் கூறி யுள்ளார். கா பழகப் பழகத்தான் செங்தமிழ் சீர் பெறுகின் றது என்ற கருத்து மேல்காட்டுப் பேராசிரியர்கள் கருத்தை ஒத்திருக்க வில்லையா ? 2. வாக்கியமுறை எழுத்தைக் கற்பித்துப் பின் சொல்லக் கற்பித்து அதன் பின் வாக்கியத்தைக் கற்பிப்பது ஒரு முறை ; இதனை ஆங்கி svá Fsi Alphabetic method (ar@pá 5Gyps^AD) -syeiev S Logical method (காரண காரிய முறை) என்று கூறுவர், இங்த முறை அவ்வளவு சரியான முறை அன்று. குழங்தை தனித்தனி எழுத்தாகப் பேசுவதில்லை. தனித்தனி எழுத் திற்கும் பொருளில்லை. அதில் சுவையும், பிடிப்பும் இரா. குழங்தை வாக்கியம் வாக்கியமாகவேபேசுகின்றது. எனவே: வாக்கியத்திலிருந்து சொல்லைக் கற்பித்துப் பின் எழுத்தைக் கற்பிப்பதே சரியான முறையென்று.மேல் காட்டு போதஞ. முறை வல்லுகர்கள் கூறுகின்றனர். இதனை Look and say method (பார்த்துச் சொல்லும் முறை) அல்லது Psychological method (உளநூல் முறை) என்று பெயரிட்டமுைப் பர். இம்முறையில் " அ " என்ற எழுத்தைக் கற்பிக் க. * அணில் ஒடுகிறது ' என்ற வாக்கியத்தைக் கூறிப் பின்