பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

27


செல்லப்படவேண்டும். இந்தத் தொடக்க நிலை இரும்புக் காலத்துக்கு உரியது. சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவரும், நன்கு தெரிந்தவரும் ஆகிய பேராசிரியர் “கெளலாண்ட்” (Professor Gowland) அவர்கள், பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள், மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து, “இரும்பை உருக்குதல், எதிர்பாரா நிகழ்ச்சியாகத் திடுதிப்பென அறியப்பட்டது; இந்த எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத்தொழில், ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த நம் தீபகற்பத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்” எனக் கருத்தறிவித்துள்ளார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதாயின், நான் கேட்கின்றேன், மேற்கு ஆசியாவைச் சேர்ந்த கிரிட் (Crete) நாடு. தன் புதிய கற்காலத்திலிருந்து, இரும்புக் காலத்திற்குச் செல்ல இரும்பை எவ்வாறு பெற்றது? கற்கால மக்கள் எல்லாம் காட்டு மக்கள் அல்லர், அவர்களின் வாழிடம் எப்போதும் மலைகள் மேலான சமநிலங்கள்தாம். இரும்பு உருக்கும் உலை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்த்தான், மனிதன் காட்டு வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்; இல்லை என்றால் வேறு எவ்வகையில் அவன் மரங்களை வெட்டிக் காட்டை அகற்றினான்?

இரும்புக் காலத்தின் பிற்பகுதியில், நாகரீகம் அகலப் பெருகிவிட்டது. மக்கள், உலோகக் கலவைகளைக் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டனர். இரும்பை அடுத்தடுத்து, பொன், பித்தளை, செப்புப் போலும் உலோகங்களால் செய்யப்பெற்ற, கருவிகள் மற்றும் உண்கலம் போலும் கலங்களை, நாம் கண்டோம். மட்பாண்டத் தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம், பெரிய பாரக்கல் காலத்துக் (Megalithic) கல்லறை முதல் பல்வேறு