பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆசிரியர் முன்னுரை

தொடர்ந்து வரும் பக்கங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தின், சங்கர பார்வதி அறக்கட்டளை சார்பில், 1940-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 29, 30 நாட்களில் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளை எடுத்துரைக்கின்றன.

இச்சொற்பொழிவுகளில், திராவிடர்களின் தோற்றம், அவர்களின் பண்பாடு ஆகியன குறித்து மேனாடு மற்றும் இந்திய நாட்டு அறிஞர்களிடையே உறுதிபட நிலவும் கருத்துக்களை ஆய்வதற்கும், திராவிடப் பண்பாடு எனப் பொதுவாக உணரப்படுவதும், தமக்குத்தாமே, தம்மளவிலான, அப்பண்பாட்டை உருவாக்கிய தமிழர், அம்மண்ணுக்கே உரிய தொல் பழங்குடியினர் என்பதை உணர்த்துவதற்கும், ஒரு பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தமிழர்கள் தங்கள் பண்பாட்டை மேற்கைப் போலவே, கிழக்கிலும் உள்ள தங்களின் பின்வரும் கால்வழியினர் கையில் கொடுத்தனர். இவ்வகையில், தொல் பழங்காலத்தில், இக்காலத்திலும், அவர்கள் பங்கு, தமக்கே உரிய தனித்தன்மை வாய்ந்தது; கருத்தைக் கவரத்தக்கது. உள்ளத்தில் ஆழ்ந்து பதியத் தக்கது சொற்பொழிவுகளின் பின் இணைத்திருக்கும் குறிப்புகள், ஆசிரியர் கூறுவன பற்றிய தீர்ப்பைப் படிப்பவர்கள் அளிக்கத் துணை செய்யவல்லன.

இச்சொற்பொழிவுகளை ஆற்ற என்னை அழைத்தமைக்கும், அவற்றை அச்சிட்டுக்கொள்ள அனுமதித்தமைக்கும், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவினர்க்கு நான் நன்றி செலுத்த வேண்டும்.