பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கூற்றுக்குச் சில சான்றுகள் காட்டுவோம்.

1. பட்டங்கொற்றன் என்னும் குறுநில மன்னனது வள்ளன்மையை கருவூர் ககதப்பிள்ளை சாத்தனார் பாடுகிறார். அவன் குதிரை மலையின் சிறு குறவர் குடியொன்றின் தலைவன். அவனது ஆதிக்கவரம்பு மிகக் குறுகியதாயினும் அவனது புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. ஏனெனில் அவனிடம் பரிசில் பெற்ற புலவர் அவனது புகழைத் தமிழகம் முழுவதும் பரப்பிவிட்டார்கள். இதனைப் புலவர் பின் வருமாறு கூறுகிறார்:

'ஊரார்க் குதிரைக் கிழவ, கூர் வேல்
நறை நார்த் தொடுத்த வேல்கையங்
கண்ணி வடி நவிலம்பின் வில்லோர் பெரும்,
கை வள்ளிகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி,
பாடுப வென்ப பரிசிலர் நாளும்,
ஈயா மன்னர் நாண,
யாது பரந்த நின் வசையில் வான் புகழே'

(புறம். 168)

2. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பதிற்றுப் பத்து இரண்டாம் பத்தில் போற்றிப்பாடியுள்ளார். அவன் முடியுடை மன்னர் மூவரில் ஒருவனே யாயினும், அவன் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தது என்று புலவர் கூறுகிறார்.

‘அமைவரல் வேலி இமயம் விற்பொறித்து
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன் கோல் நிற்க இ’

(பதிற்றுப் பத்துப் பதிகம்)

3. மதுரை நகரின் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்ததென பரிபாடல் (திரட்டு 9) கூறுகிறது.

50