பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இட்டுத் தலையெண்ணும்
        எயின ரல்லது
சுட்டுத் தலை போகா
        தொல்குடிக் குமரியை
சிறு வெள்ளாவின்
        குருளை நாண் சுற்றி,
குறு நெறிக் கூந்தல்
        நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை
        இழுக்கிய வேனத்து,
வெண்கோடு
        பறித்து மற்றது
முளை வெண்
        திங்க ளென்னச் சாத்தி
மறங் கொள் வயப்புலி
        வாய்பிளந்து பெற்ற
மாலை வெண் பற்றாலி
        நிரை பூட்டி
வளியும், புள்ளியும்
        மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை
        உடீ இப்பரிவோடு
கருவில் வாங்கும்
        கையத்துக் கொடுத்து
... ... ... ... ... ...

பறையும், குழலும் சூறைச் சின்னமும், முழங்கவும் மணியிரட்டவும் தெய்வமென எழுந்தருளுவித்து வேடர்கள் (எயினர்) வணங்குகின்றனர். பூசைக்குரிய சந்தனத்தையும், மலரையும், சாம்பிராணியையும் எயிற்றியர் (பெண்கள்) ஏந்தி வருகிறார்கள். தெய்வமும், பெண் தெய்வம் பூசனை முழுவதும் பெண்களின் உரிமை. இது பழங்காலப்

74