பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 - - . தமிழர் வரலாறு உள்ள முன்னதிலிருந்து யானைகள், குதிரைகள், நறுமணப் பொருள் வகைகள், தந்தம், தோல் மிகமிக நேர்த்தியான பொன், வெள்ளி அணிகலன்கள் வந்தன. அப்படி இல்லாமல், ஆட்டு மயிர்க்கம்பளங்கள் நீங்கலாகத் தோல், குதிரை, சங்குகள், வைரம், நீலம் முதலாம் மாணிக்கங்கள், பொன்னாலான அணிகலகன்கள் தட்சிண பரதத்திலிருந்து பெருமளவில் வந்தன என்று கெளடில்யர் கூறுகிறார். தட்சிண பரதத்தில் பற்பல சுரங்கங்கள் வழியாக, மிகச் சிறந்த வாணிகப் பொருள்கள் பெருமளவில் கிடைக்கும் நகரங்கள் வழியாகப், பல்வேறு வகை மக்களை ஆங்காங்கே கொண்டுள்ள வழியாகச் செல்லும், நீண்ட வழிப்பயணம் செய்வதற்கு எளிமையானது ஏனைய வழிகளிலும் சிறப்பு வாய்ந்தது". ("ஸ்த்ஹல பாத பி ஹை மவதொ தசுரினா பத்ஹாஎக்ரெயான்) - ஹய்த்யஸ்வ கந்த்ஹ தந்தாஜின ரூப்ய ஸ்வர்ன பன்யாஹ் சாரவத்தராங் இத்யாசார்யஹ் நெதி கெளடில்யஹ் கம்பலாஜினாஸ்வபன்ய வர்ஜாஹ் சாங்ஹவஜ்ரமணி.முக்தாஹ். சுவர்ணபண்யாஸ்கப்ரப்ஹாத்ரா, தசுவினாபத்ஹே - தசுவினாபத்ஹே பி பாஹகனிஹ் சாரபண்யஹ் ப்ரசித்த கதிர் அல்பவ்யாயாமொ வா வணிக்பதஹ ஸ்ரெயான்" (அர்த்த சாஸ்திரம். ஜாலி மற்றும் ஸ்கிமித் வெளியீடு. பகுதி 2 : 12 பக்கம் 30-34). - - இது பண்டங்களைக் கொண்டு செல்லும் பழைய முறையினைப் புகைவண்டித் தொடர்களும், சரக்குந்துகளும், அழித்து விடாமல் விட்டு வைத்திருக்கும் இடங்களில் இன்றும் நாம் காண்பதுபோல, "கிரீச்” எனும் ஒலி ஒயாது எழ, குமரி முதல் பாடலி வரையான, சீர்மிகு சீர்கெட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் கட்டை வண்டிகளாம் வணிகச் சாத்துக்கள் மூலம் நடைபெற்ற மிகப் பெரிய வாணிக நிலை பற்றிய காட்சியைக் காட்டுகிறது. வேறு ஒர் இடத்தில் அரசன் கருவூலத்திற்குச் செல்லும் அரும் பொருட்கள் பற்றிக்