பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழர் வரலாறு புரிந்தான். அவன், வடமேற்கு இந்தியாவைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டான். அது, இந்துகுஷ் மலையின் குறுக்காகப் பால்க் (Balkh) பகுதிக்கும், அங்கிருந்து எக்ஸைன் (Ewxine) பகுதிக்கும் சென்ற, பாலைவனத்தைக் கூட்டமாகக் கடக்கும் வணிகச் சாத்துமுறை புத்துயிர் பெற வழிவகுத்து விட்டது. அது, கார்மேனியன் (Karmanian) பாலையைத் தொட்டுச் செல்வதாகி, அங்கிருந்து மெஸ்படோமியா வழியாக அன்டியோக் (Antioch) நகருக்கும் சென்றது. இதன் முக்கிய விளைவு, பட்டு, முதன்முதலாக, மேற்கு நாடுகளைச் சென்றடைந்தது. "கிரேக்கர்கள், பட்டை அலெக்ஸாண் டரின் படையெடுப்பு மூலம் அறிந்து கொண்டனர் எனக் கருதப்பட்டது. ஆனால், அது அதற்குமுன்பே, பர்ஷயா மூலம், அவர்களை அடைந்திருக்கக் கூடும்." (Schoff's Periplus. P. 264. இந்நிலவழி வாணிகம், தாரியஸ்-க்குப் பிறகு, படிப்படியாகக் குறைந்துவிட்டது. எகிப்தை வெற்றி கொண்ட பின்னர், அலெக்ஸாண்டர், இந்தியாவுக்கும் ஐரோப்பியா வுக்கும் இடையில், பெரிய வாணிக நிலையமாக விரைவாக வளர்ந்து விட்ட அலெக்ஸாண்டிரியாப் பெருநகரை உருவாக்கினான். பின்னர், அம்மாவீரன் டயர் நகரைச் சூறையாடி அழித்து, அதன் பண்டை வாணிகத்தையும் பாழ்படுத்தி விட்டான். இது மேற்கு நோக்கிப் பெருகிக் கொண்டிருந்த இந்திய வணிகப்பெருக்கை, ஒரளவு அணைபோட்டுத் தடுத்து விட்டது. அலெக்ஸாண்டர் இறப்பிற்குப் பிறகு, அஸிரியாவைச் சட்ட திட்டங்கள் அற்றுப்போன குழப்பநிலை, ஆட்சிபுரியத் தொடங்கி விட்டது. பார்த்தியாவில், ஒரு புதிய பேரரசு எழுந்தது. சித்தியப் பழங்குடியினர், பாக்ட்ரியா (Bactria) மீதான, தம் திடீர்த்தாக்குதல்களைத் தொடங்கி விட்டனர். இந்நிகழ்ச்சி கள், நிலவழி வாணிகத்தில் அழிவுக்கு வழிவகுத்து விட்டன. இந்த விளைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, எகிப்தின் நலனுக்காகச் செங்கடல் வாணிக வளர்ச்சிக்கு அருமுயற்சி எடுத்துக் கொள்ளுமாறு பிலடெல்பிஸுக்கு (Philadelphus) கி.பி. 283-246ல், அழைப்பு விடுத்தார். முதல் தாலமி, சூயஸ்கால்வாய், ஓரளவு, திறக்கப்பட்டு, வாணிகப்போக்கு