பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 . தமிழர் வரலாறு நகரை அழிக்காமல் விட்டபோது, 3000 பவுண்டு மிளகையும் 4000 பட்டு மேலங்கிளையும் பிணையப் பொருள்களாகக் கேட்டுப் பெற்றான் என்பதால், இது உறுதிப்படுகிறது. (J.R. A. S. 1904, Page:648). மேலும், உரோமநாணயங்கள் "கான்ஸ்டன்டைன் (Constantine)” காலத்திலிருந்து. வடநாட்டில் காணப்படுவது போலவே, தென்னிந்தியாவிலும் காணப்பட்டன. நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் வருகை அதிகரிக்கவும் ஆயிற்று. "ட்ராஜன்" (Trajan)போலும் கீழ்ப்பகுதியை வலிந்து கைக்கொண்ட "ஜூலியன்" (Julian) இந்திய அரச இனங்கள் உட்படப் பல்வேறு கீழ்நாட்டு மக்களிடமிருந்து தூதுவர்களை வரவேற்றிருக்கும்போது, கான்ஸ்டைன்டைன், தன்னுடைய வாழ்நாளின் இறுதி ஆண்டில், இந்தியத் தூதுவர் ஒருவரை வரவேற்றான் (Warmington. Page : 140). கி. பி. 376 முதல் "பைசன்டைன்' (Byzantine) பேரரசர் களின் ஆட்சியின் கீழ்ப் பைசன்டைன் மக்களுக்குப் போதிய செல்வத்தைப் போலவே போதிய ஒய்வும் இருந்தது. கீழ் நாடுகளுக்கு அணித்தாக வைக்கப்பட்டமையால், இந்திய ஆடம்பரப் பொருள்களின் தேவை பெருகிவிட்டது. அதன் பயனாய்ப் பேரரசர்களின் நாணயங்கள், இந்தியாவில் காணப்படலாயின. ஏழாம் நூற்றாண்டில், அராபியர், சிரியா, எகிப்து, பர்ஷியா ஆகிய நாடுகளை வெற்றி கொண்டு மீண்டும், இந்திய வாணிகத்தின் இடைத்தரகராயினர். ஆகவே, யவனர் என்ற பெயர், மெல்ல மெல்ல, அராபியரை குறிக்கவும் வழங்கப்பட்டுப் பின்னர்ப் பொதுவாக, முகம் மதியரைக் குறிக்கவும் வழங்கப்பட்டுவிட்டது. ( .. ) {}