பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் -- 175 "அயொத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சீ, அவந்திகா, பூரீ, த்வாரவதி சைவ சப்தைனா மொக்ஷதாயிகா". சப்தகல்பத்ருமா என்பதில் எடுத்துக்காட்டப்பட்ட பூத சுத்தி தந்திரம். இத்தந்திரம், அண்மையில் எழுதப்பட்ட நூலாதல் கூடும். ஆனால், அச்சுலோகம், கால வெள்ளத்தில், தொல்லூழிக் காலமாக மிதந்து வந்த ஒன்று போலவே தோன்றுகிறது. வட இந்திய நாகரிகத்தோடான, காஞ்சீபுரத்தின் தொடர்புண்மையை இது உறுதி செய்கிறது. இக்கால அளவில் உண்மையான வைதீக நெறி அறவே இறந்துவிட்டது; ஆகவே, காஞ்சீபுரமோ அல்லது ஏனைய ஆறு நகரங்களோ, வைதீக யஜ்ஞந்தோடு சிறப்பாகத் தொடர் புற்றிருக்கவில்லை; ஆனால், சிவ, விஷ்ணு, காளிகளை வழிபடும் மையங்களாக இருந்தன. காஞ்சி, தொடக்கத்தி லிருந்தே, ஆரிய நாகரீகத்தின் மையமாம் என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாம். ஆந்திர அரசு அழிவுநிலை நோக்கிச் சென்றுகொண்டி ருக்கும்போது, எண்ணற்ற பெளத்தப் பள்ளிகள் கட்டப் பட்டன. சாக பல்லவரின் நெருக்குதலால், ஆந்திர அரசு கீழ்க்கரைக்குத் தள்ளப்பட்டு, "தனகடகம்", அந்திர அரசின் தலைநகராக ஆனபோது, ஆங்கு அழகிய, மிகச்சிறந்த, யவனக் கலையின் அடிச்சுவடுண்மையை உணர்த்தவல்ல, அமராவதி தவப்பள்ளி சுட்டப்பட்டது. சைவ, வைஷ்ணவ சமயங்கள் அல்லாமல், பெளத்த சமயமும், அதனோடு சமண சமயமும் காஞ்சியில் நன்கு நிலைகொண்டுவிட்டன என்பதை முழுமையாக நம்பலாம். யவனக் கலையை மங்கலாக நினைவுக்குக் கொணரவல்லதான புத்த படிமங்களும், சமண நாகரிகத்தின் பழங்கால, கல்லாலான நினைவுச் சின்னங்களும், அந்நகரில், காணப்படுவதன் உண்மையை, இது விளக்குவதாகும். பல்லவர்கள் : சாக பல்லவர்கள், கி. பி. முதலாம், இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு காலங்களில், ஆந்திரப் பேரரசுக்குள்