பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தமிழர் வரலாறு ஆகவே பல்லவப் பேரரசு, கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என முடிவு செய்கிறார். (J.R.A.S. 1885 art D. and 1889 art XIII) காஞ்சி மாநகரில், புத்தப் பள்ளிகளே மட்டுமல்லாமல் பிராமணாக்கள் ஒருசிலவும் இருந்திருக்க வேண்டும். இந்நகரைச் சேர்ந்த மிகச் சிறந்த பிராமணப் பேரறிஞர்கள், வடவர்களுக்குத் தெரிந்திருந்தனர் என்பது முன்பே குறிப்பிடப்பட்டுளது. பாணாவாசியில், கடம்ப அரச இனத்தைப் பிற்காலத்தே தோற்றுவித்த மயூரசர்மன் கல்வி கற்ற, வேதங்கள் மற்றும் சமஸ்கிருத அறிவு நூல்களைக் கற்றுத்தருவதற்கான கல்லூரி ஒன்று, கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் காஞ்சியில் நிலைப்பெற்றிருந்தது. இம்மயூரசர்மனின் கொள்ளுப் பெயரன், அதாவது பெயரனின் பிள்ளையாம் காகுஸ்தவர்மனின் தளகுண்டா எழுத்துப் பொறிப்பு, மயூரசர்மன், தன் ஆசிரியன் வீரசர்மனோடு, பல்லவ அரசர்களின் நகருக்குச் சென்று சமய அறிவுகளையெல்லாம் அறிந்து கொள்ளும் ஆர்வ மிகுதியால், ஆங்குள்ள கல்லூரியாம் கடிகத்துள் மாணவனாக இடம் கொண்டு விட்டான் எனக் கூறுகிறது. ("யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வீர சர்மனா, அத்ஹீஜிக் ஹாம்சுஹ ப்ரவகனம் நிக்ஹிலம் விவேலாய தர்க்குகஹ Ep. and Vill p. 32 V. 10). இக்கடிதம், காஞ்சி முதற்பல்லவ அரச இனம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, துவக்கப் பட்ட புதிய வொன்றன்று மாறாகக் காஞ்சி, ஆரியக் கல்வியின் ஒரு மைய இடமாக, ஆகிக் கற்றுவல்ல பெரியவர்களை, வட இந்தியாவுக்கு ஆங்குச் சமஸ்கிருதப் புலமை வளர்ச்சியில் பங்கு கொள்ளுமாறு அனுப்பிய அந்நாள் தொட்டே இருந்துவரும் நிறுவனமாம் என்றே நான் கருதுகின்றேன். (இதுவரை கிடைத்துள்ள செய்திகளின்படி காஞ்சிப் பழைய பல்லவ அரச இனத்து வரலாறு குறித்த முழு விளக்கங்களையும், பல்லவர் என்ற என் தமிழ் நூலில் (பகுதி : 1) கொடுத்துள்ளேன், பிற்பட்ட காலத்துப் பல்லவர்கள், தமிழர்களாக ஆகிவிட்டதுபோல், முற்பட்ட