பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - * ・ ・ ー தமிழர் வரலாறு என்பதைப் பகைவர் மண் தரும் வளம் உண்ணும் உரவோர் தொண்டையர் எனத் தொண்டையோர்க்குக் கல்லாடனார் ஏற்றிக் கூறிய சிறப்பைத் தாமும், அத்தொண்டையோர்க்கு ஏற்றி, அம்மரபில் வந்தவன் என்பதைக் "கொண்டி உண்டித் தொண்டையோர் மருக" எனக் கூறியதன் மூலமும் (454) வெளிப்படக் கூறி உறுதி செய்வதும் செய்துள்ளார். இத்திரை யனையும், அவனது அழியாப் பெரும்புகழையும் அறிந்து பாராட்டியுள்ளார் நக்கீரர் "செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்" (அகம் :340) இத்திரையன், கடல் திரை, கொண்டு வந்து கொடுத்த மரபில் வந்தவன் என, அவன் குலவழி மரபையும், "திரைதரு மரபின் உரவோன் உம்பல்" (31) அவன் அரசாள் நாட்டின் தலைநகர் கச்சி ஆகும். 'கச்சியோனே கைவண் தோன்றல்" (420) என அவன் தலைநகரையும் தெளிவாக்கியுள்ளார் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர். வேங்கடம் தொண்டையர்க்கு உரியது எனக் கூறிய புலவர் தாயங்கண்ணனார், அது கூறிய அதே பாட்டில் (அகம் : 213) வேங்கடத்துக்கு அப்பால் உள்ள வடுக நாட்டையும், "வேங்கடத்து உம்பர்.வடுகர் தேஎயம்" (3-8) போர்வல்ல சேரர்க்கு உரிய கொல்லிமலை சார்ந்த மேற்கு மலையையும், “வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை". (15), இரவலர்க்குப் பொன் அணிகளை வாரி வழங்குவதற்காகவே கவிழும் தொடி அணிந்த கையும், வெற்றிதரு வாட்படையும் உடைய சோழர்க்கு உரிய காவிரி ஆற்றையும், "கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்கை வலம்படு வென்றி வாய்வாள் சோழர், இலங்குநீர்க் காவிரி" (20-22) கூறியிருப்பதன் மூலம், தொண்டையர் வழிவந்த திரையன் காலத்தே, அவ்வேங்கட நாடு, அதியமான் நெடுமான் அஞ்சியின் தகடூர், வேள்பாரியின் பறம்பு போலும் நாடுகளைப் போல, மூவேந்தர் ஆட்சிக்கு உட்படாத் தனியரசு நடத்திய தமிழ் நாடாகத் திகழ்ந்தது என்பதை உணர்த்தியுள்ளார். - - - . . . . அது மட்டுமன்று, சோழர்க்குரிய காவிரிக்கு வடக்கே, பெண்ணையாற்றங்கரைத் திருக்கோவலுரைத் தலைநகராகக்