பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 205 அளித்த பெருமைக்கு உரியது காஞ்சியும், கச்சியும் என்பதும், தத்தம் இயற்பெயர்களோடு, தாம் பிறந்த ஊர்ப்பெயரை இணைத்துக்கொள்வது, தமக்குப் பெருமை சேர்க்கும் என உணர்ந்து சேர்த்துக் கொள்ளப்படுமளவு பெருமை பெற்ற பெருநகராகக் காஞ்சியும், கச்சியும் திகழ்ந்தன என்பதும் தெளிவாயின. புலவர்களை ஈன்று அளித்த பெருமை, காஞ்சிக்கும் கச்சிக்கும் மட்டுமே தனி உரிமையாய் அமைந்துவிடவில்லை. அப்பேரூர்களைத் தலைநகராகக் கொண்ட காஞ்சிக்கு அணித்தாக, மேற்கே உள்ள தாமலும், காஞ்சிக்குக் கிழக்கே, சற்றே தொலைவில் உள்ள உரோடகமும் கூடப் புலவர்களைப் பெற்றளித்த பெருமையினைப் பங்கிட்டுக் கொண்டுள்ளன. சோழன் நலங்கிள்ளி தம்பி, மாவளத் தானோடு, ஒரு நிகராக அமர்ந்து வட்டாடும் நெருக்கமும், அவ்வாட்டாடலை அவன் பிழை பட ஆடிய போது, அவனைக் கண்டிக்கும் உரிமையும், அவன், தன் பிழை உணர்ந்து வருந்தியபோது, அவனைப் பாராட்டிய பெருநட்பும் உடைய பெருந்தகைப்புலவர் பல்கண்ணனார் பிறந்த ஊர், காஞ்சி நாட்டுத் தாமலே, (புறம் : 447) நற்றிணை 306, குறுந்தொகை 155, நெடுந்தொகை 23, 95, 191 ஆகிய பாடல்களைப் பாடிய கந்தரத்தனார், பிறந்த ஊரும் காஞ்சி நாட்டு உரோடகமே. - - ஆக, வேங்கடத்தை அடுத்த காஞ்சிமண்டலம் தமிழ் வழங்கிய மண், தன்மொழிப் பெயராம், காஞ்சி, கச்சி மாநகர்களை, இருபெரும் தலைநகர்களாகக் கொண்டிருந்த பழம் பெருமை வாய்ந்தது என்பது தெற்றெனத் தெளிவாக்கப் பட்டது. - காஞ்சியும், கச்சியும் தொண்டை நாட்டுத் தலைநகர்களாக இல்லையாயினும், பெருநகரங்களாக இருந்தன என்பது உண்மையாயின், அத்தொண்டை நாட்டுப் பல்வேறு பகுதிகளையும், பல்வளங்களையும் பாடிய பெரும் பாணாற்றுப் படை ஆசிரியர், தம்முடைய நெடிய பாட்டில், காஞ்சியைக் குறிப்பிடாமல், கச்சியை மட்டும் குறிப்பிட்டி