பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 221 நசையுநர்த் தடையா நன்பெரு வாயில், இசையேன் புக்கு என் இடும்பைதீர, எய்த்த மெய்யேன், எய்யே னாகிப், பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக், கைக் கசடு இருந்த என் கண்ணகன் தடாரி இருசீர்ப் பாணிக்கு ஏற்ப, விரிகதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் ஒன்றியான் பெட்டா அளவையின், ஒன்றிய கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறிக், கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப், பருகு வன்ன அருகாம் நோக்கமொடு உருகு பவைபோல் என்பு குளிர்கொளிஇ, ஈரும் பேனும் இருந்து இறை கூடி வேரொரு நனைந்து வேற்றிழை நுழைந்த துன்னல் சிதாஅர் துவர நீக்கி, நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி அன்ன அறுவை நல்கி மழையென மருளும் மகிழ்செய் மாடத்து இழையணி வனப்பின் இன்னகை மகளிர் போக்கில் பொலங்கலம் நிலையப் பல்கால் வாக்குபு தரத்தர, வருத்தம் வீட, ஆர வுண்டு பேரளுர் போக்கிச் செருக்கொடு நின்ற காலை, மற்றவன் திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கித், தவம்செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது அதன்பயம் எய்திய அளவை மான, ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி,