பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - தமிழர் வரலாறு வரலாற்று ஆசிரியர்கள் கொள்ள, ஆரியவர்த்தத்தின் புதினத் தன்மையும், தப்புவழி காட்டிவிட்டது. திருவாளர் டி. ஆர். பந்தர்கார் அவர்கள் இந்தியாவின் வடபாதியிலிருந்து தென் இந்தியாவைப் பிரிக்கும் விந்தியமலையை, ஆரியர்கள், அய்த்ரேய பிராமனா காலத்தில்தான் முதன் முதலாகக் கடந்தனர்; உதாரணத்திற்கு :- அய்த்ரேய பிராமணத்தில், பீமா என்ற இளவரசன், வைதர்ப்பா என்ற பெயரில், வைதர்ப்ப நாட்டின் இளவரசனாக முடிசூட்டப்பட்டுள்ளான். இது ஆரியர்கள், வித்தியத்தின் அடிவாரத்திற்கு வந்து, விதர்ப்பம் அல்லது விந்திய மலைத் தொடர்க்கு மிக அணித்தாகத், தெற்கில் உள்ள, மேற்குப் பேராறில் குடியேறினர் எனக் கூறுகிறார். வரலாறு பற்றிய ஆய்வில் திறனாய்வு முறையினைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான ஒரு முன் மாதிரி, இது. பீம வைதர்ப்ப என்ற பெயரை, அய்த்ரேய பிராமனா குறிப்பிட, இருக்குவேத மந்திரங்கள் குறிப்பிடாமையால், ஆரிய அரசர், அப்போது தான் விந்தியத்தைக் கடந்துள்ளனர்! அய்த்ரேய பிராமணா இயற்றப்படுவதற்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பீமா வாழ்ந்திருக்க வேண்டும்: ஆனால், அந்நூல் அவனைக் குறிப்பிடும் இப்போது தான், அவன் விந்தியத்தைக் கடந்துள்ளான் இட்சுவாகுவும், புரூவர்களும் முறையே, சூரிய, சந்திர அரச குலங்களைக் கண்டுபிடித்த காலம்தொட்டு, தொண்ணுறு முதல், நூறு வரையான, அரசதலைமுறைகள் கழிந்து போகும் வரையான கால வெள்ளத்தில் மிதந்து வந்த, பழைய காதுவழிச் செய்திகளையெல்லாம் பதிவு செய்துளது, அய்த்ரேய பிராமனா; ஆகவே, அந்நூல்களில், ஒருவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவன், அந்நூலாசிரியர்களின் சமகாலத்தவன் என்பது பொருளாகிவிடாது. உண்மையில், விதர்ப்ப நாட்டு, பீமா அல்லது பீமரதன் என்பவன், இராமனுக்கு ஏறத்தாழ, பதினைந்து தலைமுறைகளுக்கும், மகாபாரத காலத்துப் பிரஹத் பாலனுக்கு நாற்பது தலைமுறைகளுக்கும் முற்பட்டவனான, அயோத்யா நாட்டு