பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் .. 291 மேலும், சோழன் பெருநற்கிள்ளி, கண்ணகி தேவிக்கு உறையூரில் கோயில் கட்டி விழா எடுத்தான் எனக் கூறுகிறது. உரைபெறுகட்டுரை; ஆனால், இது வாழ்த்துக் காதையில் கூறப்படவில்லை என்றெல்லாம் அவர் கூறுவது காண்க. “In the Silappadigaram, it is said, that among others such as the king of Malva, Kayavagu King of Lanka, surrounded by the sea, attended the sacrifice performed, by Senguttuvan in honour of Kannagi's visible elevation to the god head, "The "Ural peru Kattural" a prose prologue to the Epic, Party contradicts the above statement and says, "Kayavagu heard of the marvellous story of Kannagi and --- frequently celebrated the festival of Kannagi, This prologue also says that. Perungilli, the Solan, built a temple to the Chaste - goddess (Pattini Davi) at Woraiyur, but the Epic does not refer to this" (History of the Tamils Page. 380). . - வஞ்சியில், செங்குட்டுவன் எடுத்த விழாவிற்கு வந்திருந் தார், தங்கள் தங்கள் நாடுகளில் விழா எடுக்க வரங்கேட்டுப் பெற்றனர் என்றாலும், வ்ந்திருந்த அவர் அனைவரும் விழா எடுத்தார் அல்லர். விழா எடுக்க வேண்டிய தேவைக்கு உள்ளானார் மட்டுமே விழா எடுத்தனர். அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னர், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னர்; குடகங்கொங்கர்; மாளுவ வேந்தர், கயவாகு ஆகிய ஐவர் விழாவிற்கு வந்திருந்தவர்; இவர்களுள், கொங்கர், கயவாகு ஆகிய இருவர் மட்டுமே தங்கள் நாட்டகத்தே விழா எடுத்தவர் என்கிறது உரைபெறுகட்டுரை. : அது போலவே, மழைவளம் வேண்டித் தங்கள் தங்கள் நாட்டகத்தே, கண்ணகிக்கு விழா எடுத்தவர் அனைவரும், வஞ்சியில், செங்குட்டுவன் எடுத்த விழாவில் பங்கு கொண் டவர் அல்லர். கொற்கைக் காவலன் வெற்றி வேற்செழியன், கொங்கிளங்கோசர், கயவாகு சோழன் பெருங்கிள்ளி, ஆகிய இந்நால்வரும், கண்ணகிக்கு விழா எடுத்தனர் எனக் கூறுகிறது உரைபெறுகட்டுரை. இந்நால்வருள், கோசரும், கயவாகுவும் மட்டுமே, வஞ்சி விழாவிற்கு வருகை தந்தவர் ; கொற்கைச் செழியனும், கோழிப் பெருங்கிள்ளியும், வஞ்சிக்கு வராதவர்கள். “. . -