பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 - - தமிழர் வரலாறு இனத்தவரைக் குறிக்க வழங்கப்படுதலின், திரையர்' என்ற இனத்தவர், தங்கள் சின்னமாகத் தொண்டைக் கொடியைக் கொண்டனர் எனக்கொள்ளலாம். தொண்டைமான் என்பது, இளந்திரையன் பட்டப்பெயர் தொண்டை மாலைக்கு உரியவன் என்றுமட்டுமே அது பொருள்படும். இத்திரையன், தொண்டையர் குலத்தலைவனாயின், அவன், கரிகாலன் பெயரனும் ஆகல் எவ்வாறு இயலும்? அவனுடைய தாய், ஒரு திரையர் குலப்பெண்ணாய் இருந்தால் மட்டுமே அது இயலும், சோழர், திரையர் ஆகிய இரு குலத்தவரின் வழிவந்தவன் இளந்திரையன் என்பது, பெரும்பாணாற்றுப் படையில் குறிப்பிடப்பட்டுளது. "இப்பெரிய உலகை அளந்து கண்டவனும், திருவாகிய அழகிய மறு விளங்கும் மார்பினை உடையவனும், கடல் போலும் நிறத்தினை உடையவனுமாகிய விஷ்ணுவின் வழிவந்த, பரந்த இப்பேருலகில் வாழும் உயிர்களைக் காக்கும், வெற்றி முரசு முழங்கும் மூவேந்தர்களுள்ளும் சிறந்த, சோழர் குடியில் வந்தவன் நீ! பரந்தகட்லில் பிறக்கும் சங்குகளில், உலகத்தவர் அனைவராலும், குற்றம் தீர்ந்து சிறந்தது எனப் புகழப்படும் வலம்புரிச் சங்கு போலக், குற்றம் இலனும், குணநலன் உடையனும் ஆகுவை நாட்டில் அறம் அல்லனவற்றை அறவே அழித்து, அறமே சிறக்க ஆளும் ஆட்சி நலன் உடையை திரைவழிவந்த மரபில் பிறந்தவனும் ஆகுவை!" "இருநிலம் கடந்த, திருமறு மார்பின், முன்னிர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் திரைதருமரபின் உரவோன் உம்பல்!. மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும், முரசு முழங்குதானை மூவருள்ளும் இலங்கு நீர்ப் பரப்பின் வளைமீக் கூறும் வலம் புரியன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்." . . . - பெரும்பாண் : 29 - 37