பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 347 அளவில் மாதங்களின் ஆரிய முறையிலான வரிசைப்பாடும், அவற்றின் சமஸ்கிருதப் பெயர்களும், தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான, மிகப் பழைய குறிப்பு, இதுதான். நற்றிணையில், பெரும்பாலும், இறைவழிபாட்டுக் கடனாகத் தைத்திங்களில், குளிர் நீர்க்குளத்தில் நீராடும் மகளிர் பற்றிய குறிப்பு ஒன்று உளது. ("தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - நற்றிணை : 80 : 7). குறுந்தொகை, தைத்திங்களின் குளிர் போலும், குளிர்ந்த சுனைநீர் பற்றிப் பேசுகிறது. ("சுனைத் தெண்ணிர், தைஇத் திங்கள் தண்ணிய" - குறுந்தொகை : 194 : 3-4). இது போலும், தொடர் இடம் பெறும் பாக்கள், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டை விடப் பழைய காலத்தைச் சேர்ந்தனவாகா. புறநானூற்றுத் தொகை நூலில், பெரும்பாலும் பிற்பட்ட பாக்களில் ஒன்று ஆன, சேரமான், யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொரை என்பானைப் பாராட்டும் புறம் : 229, ஒரு விண் வீழ்கொள்ளி வீழும் அந்நாளன்று, ஞாயிறு திங்கள் போலும் கோள்களும், அசுவனி, பரணி போலும் விண்மீன்களும் இடங். கொண்டிருந்த நிலைகளைத் தெரிவிக்கிறது. அச்செய்தி, அவ்வுற்பாதம் எப்போது இடம் பெற்றது என்பதை நாம் கண்டு கொள்ள, நமக்குப் போதுமானவையோ, அத்துணைத் தெளிவுடையவையோ அல்ல. ஆனால், அந்த அரசன், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் பிற்காலத்தைச் சேர்ந்தவருள் ஒருவன் என்பதைக் கொண்டு காணின், அது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஆதல் இயலாது. கிள்ளிவளவன் புகழ்பாடும் பாட்டு ஒன்றில், அரசர் களிடையேயான ஒர் அரிய வழக்கம் குறிப்பிடப்பட்டுளது. பழைய தமிழரசர்கள், பகைவர்களை வெற்றி கொண்டபோது அப்பகைவரிடம் கொள்ளும் ஏனைய பொருள்களோடு, அவர்களின் முடிகளையும் கைக்கொண்டு, பகைவர்களின் அம்முடிகளை அழித்துக் கொண்ட பசும் பொன்னால், வீரக்கழல் பண்ணித் தம் கால்களில் அணிந்து கொள்வர். அரசர்களின், வெற்றிப் பெருமிதத்திற்கும், பகைவர்களின் தோல்விப் பேரிழிவிற்கும், இதுவே தமிழர் இலக்கணமாம். புலவர் ஒருவர் இவ்வாறு பாடியுள்ளார். "பகைவர்