பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 361 "செழியன் நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானம்" - அகம் : 209. ‘ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட கால முன்ப" "ஒன்று மொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணி, பிணியுறு முரசம் கொண்டகாலை நிலைதிரிபு எறியத் திண்படை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றே நின்வேல் செழிய” "அரைசுபட அமர் உழக்கி உரைசெல முரசவெளவி முடித்தலை அடுப்பாகப் புனல் குருதி உலைக் கொளிஇத் தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின் அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய" - புறம் : 23, 25, 26. இவற்றுள், எடுத்துக்காட்டு ஒன்றில், செழியன் என்ற அவன் பெயரும், அவன் பகைவர் எழுவர் என்பதும், போர்க்களம் ஆலங்கானம் என்பதும் உணர்த்தப்பட்டன. எடுத்துக்காட்டு இரண்டில், களம், ஆலங்கானம் என்பது மட்டுமே உணர்த்தப்பட்டது. எடுத்துக்காட்டு மூன்றில், பகைவர், வேந்தர் என்பதும், அவன், செழியன் என்பதும் உணர்த்தப்பட்டன. எடுத்துக்காட்டு நான்கில், பகைவர் முரசு கைப்பற்றப்பட்டதும், அவன் களவேள்வி செய்ததும் அவன் செழியன் என்பதும் உணர்த்தப்பட்டன. - ஆக, அப்பாக்கள் நான்கினையும் ஒருங்கு வைத்து நோக்கிய வழியே, ஆலங்கானத்துப் போர் வீரன் செழியன்,