பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 367 வற்றிற்குக் கிடைக்காமைக்குப் பழைய ஏட்டுச் சுவடிகளின் சீர்கெட்ட நிலையே காரணம். இது, அந்நூல் பதிப்பாசிய ரால், அவருடைய முகவுரையில் (14 - 15) தெளிவாக உணர்த்தப்பட்டுளது" என் விளக்கம் அளித்திருப்பதின் மூலம், அவர் வாதத்தின் வலிவின்மையை உணர்த்தியுள்ளார். “in reality, the colophons were furnished for all the odes and as already stated, it is only the decayed state of the manuscripts, that is responsible for the gaps in our knowledge. This is sufficiently indicated by the searned editor of the work in his preface” Page : 12, பலநூறு ஆண்டு கால இடைவெளியில் தொகை நூல்களில், பிழைபடு இடைச்செருகல்களே இடம் பெறாது தம் பண்டைய வடிவிலேயே பாக்கள், கிடைத்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அரிதினும் அரிதாம். ஆகவே, அத்தகு குறைபாடு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு, அப்பாக்களையும், அப்பாக்களோடு கொடுக்கப்பட்டிருக்கும் கொளுக்களையும் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்க் இயலாது. என அறவே மறுப்பது வரலாற்று நூல்கள் எழுவதை, இயலாததாக ஆக்கிவிடும், ஒரு தவறான வழிகாட்டு நெறியைக் காட்டுவதாகும்". “We can hardly expect that in the course of long centuries, the anthologies have been transmitted to us without errors in details have crept in. But for this reason, to cast a doubt on the accuracy of the whole groups of poems and their colophons and to reject them wholesale is to apply standards of criticism, which would render all historical writings impossible" Page : 18. புறநானூற்றுக் கொளுக்கள் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறும் திரு. பி. டி. எஸ். அவர்களின் கொள்கைக்கு மேலும் ஒரு படி மேலே சென்று, கல்வெட்டுகளும், செப்பேடுகளும் அளிக்கும் சான்றுகளை வலுவான சான்றுகளாக ஏற்றுக்கொண்டு, புறநானூறு போலும் தொகை நூல்களையும், அவற்றின் கொளுக்களையும் ஏற்க மறுக்கும் வரலாற்றுப் பேராசிரியர் சிலரும் உள்ளனர்.