பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 37] நெய்ம்மலி ஆவுதி பொங்கப், பன்மாண் iயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பல." - புறம் : 15 : 16 - 21. இப்பாண்டியனால் போற்றிப் புரக்கப்பட்ட ஒரு யாகம், வேள்விக்குடிச் செப்பேட்டில் (Ep. ind, 18 : P. 291) குறிப்பிடப்பட்டுளது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதியால் வழங்கப்பட்டுப் பின்னர்க் களப்பிர அரசன் ஒருவனால் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்ட ஒர் உடைமையின் உரிமையை, மீட்டு அளித்தல் காரணமாக, இக்கொடைப்பட்டயம், பெரும்பாலும், எட்டாம் நூற்றாண்டின் நாற்கூறுகளில், மூன்றாவது கூற்றின்போது வெளியிடப்பட்டதாகும். இந்நன்கொடை முதன்முதலாக, எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்பட்டதோ, அந்தச் சூழ்நிலைகள், எட்டாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட, இந்நன்கொடை ஆவணத்தில் இவ்வாறு விரித்துரைக்கப் பட்டுள்ளன : இந்தியக் கல்வெட்டுக்கள் (Epigraphia India) என்ற நூலில், கொடுக்கப்பட்டிருக்கும், அப்பட்டயத்துக்கான மொழிபெயர்ப்பு பிழையுடையதாக இருப்பதால், என்னுடைய மொழி பெயர்ப்பைக் கொடுத்துள்ளேன்.) "வண்டுகள் மொய்த்து ஓலமிடும் குளிர்ந்த அரும்புகளைக் கொண்ட நாகமரங்களும், மாமரங்களும் செறிந்த மலர்ச்சோலைகள் சூழ்ந்த பாகனூர்க்கூற்றம் என்ற நிலவளமும், நீர்வளமும் மிகுந்த நாட்டில் வாழும், கற்று வல்ல வேள்வியாசிரியர்கள் சொல்லித் தந்த ச்ருதி-மார்க்கம் தவறாத, கொற்கைக்கிழான், நற்கொற்றன் என்பான். வேள்வி ஒன்று செய்யத் தொடங்கினான். “வேள்வியை முற்றுவிக்கத் துணைபுரிவான் வேண்டிக் கொல்லும் போர் வல்ல களிறுகள் எண்ணற்றன போக்கிப் பகை மன்னர் குலங்களை அழித்து ஒழித்த பல்யாக முது குடுமிப் பெருவழுதி அரசன் பட்டப் பெயரில் "சாலை" எனும் சொல், காலவெள்ளத்தால் கைவிடப்பட்டுளது. என்னும் பாண்டியாதிராசன் ("அதிராஜர்" என்ற பட்டம், பாண்டிய அரசர்களாலும், பிற