பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 தமிழர் வரலாறு 10. 15. 20. விசும்பு தைவரு வளியும், வளி தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப், போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அளியும் உடையோய்! நின்கடல் பிறந்த ஞாயிறு, பெயர்த்தும் நின் வெண்தலைப் புணரி குடகடல் குளிக்கும், யானர் வைப்பின் நன்னாட்டுப் பொரு ந! வான வரம்பனை நீயோ, பெரும! அரங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம்பதின்மரும், பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நாஅல் வேத நெறி திரியினும், திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி. நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தி விளக்கில் - துஞ்சும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே". . - - புறம் 2. பதினைந்து பதினாறாம் வரிகள் பொருள் தெளிவில்லா மல் உள்ளன். "போர்க் களத்தில் ஈரைம்பதின்மர் வீழ்ந்து ஒழிய பெருஞ்சோற்றினை வரையாது வழங்கின" என்கின்றன அவ்வரிகள். "ஒழிய” என்ற வினையெச்சம், பல் பொருள் தரவல்லது : 1) அவர்கள் விழ, அதன் காரணத்திற்காக, 2) அவர்கள் வீழ்ந்த போது என்ற இவ்விரு பொருள்கள்,