பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 409 அவற்றுள் முக்கியமானவை. இவ்விரண்டனுள், பின்னது, அவர்கள் வீழ்ந்த அந்தக் காலம், அல்லது, அவர்கள் வீழந்த பின்னர், (அது, எவ்வளவு காலத்திற்குப் பின்னர், நாம் அறியோம்) என, இவ்விருவகையாலும் பொருள் படுமாதலின், அது, தவறான பொருள் கொள்ளவும் இடந்தரவல்லதாம். விழ, அதன் காரணமாக என்ற முதற்பொருளே, பொருந்தும் பொருள் ஆகும். ஆனால், தொடக்க நாட்களிலிருந்தே, தமிழ்ப் பேராசிரியர்கள், உதியஞ்சேரலாதன். அப்போர்க் களத்தில் இருந்தான் என்ற யூகத்தைத் தேவையுடையதாக்கும் வகையில், அத்தொடர்க்கு, அவர்கள் வீழ்ந்த அந்தக் காலம் என்ற பொருளே கொண்டுள்ளனர். அவர்களைப் பின்பற்றிப் புறநானூற்று உரையாசிரியரும், தம்முடைய உரையில், மூலத்தில் காணப்பெறாத, ஆனால், தம்முடைய பரந்த நூலறிவு, நுண்ணிய ஆராய்ச்சிகளின் பயனாகக்கண்டு கொண்ட பலசெய்திகளைக் கொண்டு வந்து இணைத்து, இச்சேர வேந்தன், போரிடும் இருதிறப் படைகளுக்கும், பெரும்பாலும் அப்போர் முடியுங்காறும், வரையாது உணவு பழங்கினான் என்று கூறியுள்ளார். (உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்!" புறம் : இரண்டாப்பதிப்பு : பக்கம் : 7) இப் புதுக் கருத்தைத் தம் உரையில் நுழைப்பதில், இவ்வுரையாசிரியர், பழந்தமிழ் அரசர்கள் பற்றிய கற்பனைக் கதைகளின், வரைந்து காணமாட்டாக் கருவூலமாய சிலப்பதிகாரக் காப்பியத்தையே பெரிதும் துணைகொண்டு உள்ளார். அப்பாட்டில், "உதியஞ்சேரல் , ஐவர்க்கும், நூற்றுவர்க்கும் இடையில் நடைபெற்ற போரில், பெரிய அளவிலான சோற்றை வரையாது வழங்கிய சேரன், பொறையன்" என அழைக்கப்பட்டுள்ளான்: "ஓர்ஐவர் ஈர்ஐம்பதின்மர் உடன்று எழுந்த - போரில் பெருஞ்சோறு போற்றாது 577 அளித்த - சேரன், பொறையன், மலையன்" : : - : 29 : ஊசல்வரி : 2.