பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 தமிழர் வரலாறு இப்பாட்டு, புகழ்பெற்ற அப்பெருவிருந்து நடைபெற்ற இடமாக, பெரும்பாலும், அதே பெயரில் கோவை மாவட்டத்தில் உள்ள குழுமூரைக் குறிப்பிடுகிறதேயல்லது. குருக்ஷேத்திரத்தை அன்று. மற்றொரு பாட்டு, "இறந்து துறக்கலோகம் அடைந்த இறவா நற்புகழ் வாய்ந்த முன்னோர்கட்குத் தென்புலக் கடன் ஆற்றுவான்வேண்டி உதியன் சேரலாதன் பெருஞ்சோறு படைத்தபோது, கரிய பெரிய பேய்க் கூட்டம் கூடியிருந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல் கூளிச்சுற்றம் குழிஇ இருந்தாங்கு", . - அகம் : 233 : 7 - 10. இப்பாட்டு அப்பெருஞ்சோறு வழங்கல் போர் நிகழ்ந்த போது நடைபெறவில்லை. அதற்கு மாறாக, அதற்கு மிக மிகப் பிற்பட்டகாலத்தே அப்போர் நினைவாக மேற் கொள்ளப்பட்ட விழாவின் போதே நடைபெற்றது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. அவ்விழா குழுமூர் என்னும் இடத்தில் நாடகமுடிவில் நடிகர்களும், நாடகம் காண வந்தவர்களும் பெருஞ்சோறு படைக்கப்பட்ட நாடக விழாவாக அல்லது வேறு எதுவாக இருக்க இயலும்? இப்பாட்டு பழைய தொகை நூல்களில் இடம்பெற்ற பாக்கள் சிலவற்றைப் பாடிய, காலத்தால் பிற்பட்ட புலவர்களுள் ஒருவராய மாமூலனாரால் பாடப்பெற்றுளது. ஆகவே, உதியஞ்சேரலாதனின் காலம், நனிமிகப்பழைய காலத்தது. ஆதல் இயலாது. - (இக்கருத்து ஏற்புடைய தன்று என்பது, மொழிபெயாப்பு ஆசிரியரின் "மாமூலனார் காலம்" என்ற திறனாய்வில் விளக்கப்பட்டுளது.)