பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 425 புலவராம், மாமூலனார், நெடுஞ்சேரலாதனின், வெற்றிச் செயல்களையெல்லாம், "வெற்றி தரும் போர் முரசினை யுடைய நெடுஞ்சேரலாதன், கடலிடையே சென்று, அங்கு அரசு செய்திருந்த கடம்பரின் காவல் மரத்தை வெட்டி, இமையமலையில், தனது முன்னோரைப் போலவே வளைந்த வில்லாம் தன் இலச்சினையைப் பொறித்து, மாந்தை எனும் ஊரில் உள்ள தன் அரண்மனை முற்றத்தே, பகைவர் பணிந்து வந்து திறையாகக் குவித்த பெருமை மிக்க நல்ல அணிகலன்கள், பொன்னால் செய்யப்பட்ட பாவையினையும், வயிரங்களையும் கொண்டவன்" எனத் தொகுத்துக் கூறியுள்ளார். - - “வலம்படு முரசின் சேர லாதன், முந்நீர் ஒட்டிக், கடம்பு எறிந்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவில் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடுசால் நன்கலம் பொன் செய் பாவை வயிரமொடு" - அகம் : 127 : 3-8. நெடுஞ்சேரலாதனின் தந்தை, வானத்தையே நாட்டு எல்லையாகக் கொண்டவன் எனும் பொருள் உடையதான "வானவரம்பன்" . அவன்மகன். இமையத்தையே நாட்டு எல்லையாகக் கொண்ட "இமையவரம்பன்" ஆகிவிட்டான். நெடுஞ்சேரலாதன் குறித்த கற்பனைகள் : நெடுஞ்சேரலாதனின் இமயம் வரையான வெற்றி, குறித்துப் பதிற்றுப்பத்தில் காணப்படும், முரட்டுக்கண் மூடித்தனமான, தெளிவில்லாத கூற்று, இவ்வாறு, அம்மலை உச்சியில் தன் வில் இலச்சினையைப் பொறித்த உண்மையான நிகழ்ச்சியாக உறுதிப்பட்டு விட்டதைக் காண்கிறோம். ஆரியக் கோட்பாடுகள் தமிழகத்தில் விரைந்து பரவியதன் விளைவாகத் தமிழ்ப் புலவர்கள். "சேது முதல் இமயல்வரை" என்ற ஆரியச் சொற்றொடரை நன்கு அறிந்துகொண்ட ஐந்தாம் நூற்றாண்டில், அவர்கள் தம் பாக்களில் பணிதவழும்