பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 தமிழர் வரலாறு "செவிவேல் முள்ளுர் மன்னன் கழல் தொடிக் காளி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஒரிக் கொன்று, சேரலர்க்கு ஈத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி நிலைபெறு கடவுள் ஆக்கிய பலர் புகழ் பாவை." - - அகம் : 209 : 1.1 - 17. காரி, ஒரியைக் கொல்வதற்கு முன்னர்க் கொல்லி மலைப்பகுதி ஒரியால் ஆளப்பட்டு வந்துளது. காரி, ஒரியைக் கொன்ற நிகழ்ச்சி, பழங்காலத்தவர் கருத்தை மிகவும் ஈர்த்துளது என்பது தெளிவு. காரி மற்றும் சேரர்களைப் புகழ்ந்து பாடும் புலவர் கபிலர், "இளையாள் ஒருத்தி, தெருவின்கண் ஒருநாள் சென்றது காரணமாக, வழிவழி வந்த வெற்றிச் சிறப்பினையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல் வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி, அவ்வோரிக்கு உரிய ஒப்பற்ற தலைநகர்த் தெருவில் புகுந்ததைக் கண்ட காரியின் பகைவராகிய அவ்வோரியைச் சார்ந்தவர் ஒன்றுகூடி எழுப்பிய பேரிரைச்சல் போல, இவ்வூரிலும் பேரொலி எழுந்துவிட்டது எனக் கூறுகிறார். "இளையோள் இறந்த அனைத்தற்குப், பழவிறல் ஒரிக் கொன்ற ஒரு பெரும் தெருவில் காளிபுக்க நேரார் புலம் போல் கல்லென் றன்றால் ஊரே" - - - நற்றினை : 320 : 4-7. காரி, முள்ளுர் மன்னன் என அழைக்கப்படுதல் போலவே, பெண்ணையாற்றை அடுத்த நிலப்பரப்பின் மன்னனாகவும் அழைக்கப்பட்டுள்ளான் "பெண்ணையம் படப்பை நாடு கிழவோனே" (புறம் : 126 : 23) (முள்ளுர் பண்டை அருவா நாட்டின் தென் எல்லைக்கண் செஞ்சிக்கு அணித்தாக உளது)