பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 தமிழர் வரலாறு 2 அதியன் : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட, நெடுநல்வாடை பாடிய நக்கீரால், கொங்கரை வென்று நாடுபல கொண்டவனாகப் பராட்டப் பெற்றவன் பசும்பூண் பாண்டியன, ("கொங்கர் ஒட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்" (அகம் : 253) அப்பசும்பூண் பாண்டியன் படைத்தலைவனாகவும், வாகைப் பறந்தலைப்போரில், பட்டத்து யானையோடு இறந்துபட்டான் எனவும், அதனால் பசும்பூண் பாண்டியனின் பகைவராம் கொங்கர் மகிழ்ச்சிப் பெருக்கால் ஆராவாரித்தனர் எனவும் பாராட்டிப் பாடியுள்ளார் பரணர் : (" வாகைப் பரந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன், களிறொடு பட்ட ஒன்றை ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே' (குறுந் : 393) ஆகப் பெருவீரர் புகழ் பாடும் கினைப்பறை ஒலி அவிந்துபோக மறைந்த மேலோன் அதியன் ("அதியன் பின்றை வள்ளுயிர் மாக்கினை கண் அவிந்தாங்கு" (அகம் : 325) என மாமூலனாரால் பாராட்டப்பெற்ற அதியன், நக்கீரரின் பாட்டு டைத் தலைவனாம் நெடுஞ்செழியனின் பகைவர்களாம் கொங்கர்க்கு மகிழ்ச்சியூட்டுதற்குக் காரணமாய், வாகைப் போர்க்களத்தில், போர்க்களிற்றின் மீதிருந்தே உயிர்நீத்த பெருவீரனாவன் எனப் பரணரால் பாராட்டப்பெற்ற பெரியோனாவன். 3) ஆவி : "நெடுவேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி" "நெடுவேள் ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி" (அகம் : 1 : 61) என மாமூலனாரால் பாடப்பெற்ற நெடிவேள் ஆவி, சிறுபாணாற்றுப்படை ஆசிரியர், இடைக் கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரால், "கால மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன்” (85 - 87) எனப்பாராட்டப் பெற்றவனும், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங் குன்றுார்கிழார் போலும் பழம்பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றவனும் ஆகிய வையாவிக் கோப்பெரும் பேகனே ஆவன். ஆகவே, அவனும், அவனைப் பாடிய மாமூலனாரும், பரனரின் பாராட்டினைப் பெற்ற