பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 தமிழர் வரலாறு அகச்சான்று இருப்பதாகக் கூறினாரேயல்லது, அந்த அகச்சான்று யாது என்பதைக் கூறினார் அல்லர்” என்று கூறிவிட்டு, அவர் கூறிய முடிவை மறுக்கவல்ல எந்த வாதத்தையும், தாமும் எடுத்துவைக்காமல், மாமூலனார், கி. பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தவர் என்ற, தம்முடைய பழைய பல்லவியையே பாடிமுடித்துள்ளார். The theory of the Mauryan invasion of Indian, in the reign of Chandragupta of Bindusara rests on these four passages. Possibly as a prop for the theory, S. Krishnasamy Ayyangar, assumes that these passages are, 'ascribable to the first century of the Christain era; “{Page : 85); and says that, “There is enough infernal evidence to show that Mamulanar was the exact contemporary of the Chola ruler Karikala" (Page : 87). He does not tes us what that internal evidence is. He alludes to the fact that, when Peruncheraladan, the foe of Karikal committed suicide, his courtiers heard of it, and they also committed suicide.” (History of the Tamils Page : 524.] திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் கரிகாலன் காலத்தவர் மாமூலானார். ஆகவே, கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறியிருக்கவும், அதற்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்றுகளை மறுக்க இயலாத திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், "தம் முடிவிற்கு உறுதி செய்யவல்ல போதிய அகச் சான்றுகள் உள்ளன எனக் கூறிய கிருஷ்ணசாமி அய்யங்கார், அந்த சான்று யாது என்பதைக் கூறவில்லை" என்று மட்டுமே கூறித் தம் வாதத்தின் வலுவின்மைக்கு, மறைமுகமாக ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், மோரியர் தென்னாட்டுப் படையெடுப்பு, கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கை, மேலும் சில வரலாற்றுப் பேராசிரியர் களிடையேயும் நிலவி வருகிறது என்பது ஈண்டுக் குறிப்பிடல் திகும். - - மதுரை நாயக்க மன்னர்கள் (Nayaks of Madura) சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில், 1944-இல், திரு. சத்தியநாத அய்யரால் நிகழ்த்தப்பட்ட இரண்டு சொற்பொழிவுகளின்