பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் - 63 வரலாற்று உண்மையோடு பட்ட முடிவன்று என்பது உறுதி செய்யப்பட்டது. - சேதுவைக் குறிப்பிடும் வால்மீகி, அச்சேதுக் கரைக்கு - உரியராம் பாண்டியரைப் பெயர் சுட்டிக் கூறாமையைக் காரணம் காட்டி, இராமயண காலத்தில், பாண்டியர், அப்பகுதியை ஆண்டிருந்தால், வால்மீகி அப்பாண்டியரைக் குறிப்பிட்டிருப்பார், வால்மீகி அவர்களைக் குறிப்பிட வில்லை; ஆகவே, இராமாயண காலத்தில், பாண்டியர் அரசு அங்குத் தோன்றவில்லை; இராமர் சேது அணை கட்டியபோது, அச்சேதுக் கடற்கரைப் பகுதியில் பாண்டியர் அரசு தோன்றவில்லை. (Moreover, these districts not even, that of the Pandyas, from whose coast Rama crossed to ceylon are not mentioned when describing Rama's march in the sourthern most part of India. He started his famous bridge from the Pandya country and if the Pandyas had existed in his time, it would have been mentioned in this part of the poem. (Page : 54) எனக் கூறுமுகத்தால், இன்ன ஒரு பொருள் அல்லது இன்ன ஒரு செய்தி அல்லது இன்ன ஓர் அரச இனம், இராமர் காலத்தில் இல்லை என்பதற்கு அக்காலத்திய நிகழ்ச்சிகளைக் கூறும் வால்மீகியால், அக்காலத்திய நிகழ்ச்சிகளோடு இணைத்து இராமாயணத்தில் கூறப்படாதிருப்பதைச் சான்றாகக் கொள்ளும் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், ஒரு பொருளை அல்லது ஒரு செய்தியை, அல்லது ஓர் இனத்தை, வால்மீகி தம்முடைய இராமாயணத்தில் குறிப்பிட்டுவிட்டதினாலேயே, அவை, வால்மீகி காலத்தில், இராமாயண காலத்தில் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்கிறாரா என்றால் இல்லை. வால்மீகி இராமாயணத்தில் அவை குறிப்பிடப்பட்டுவிட்ட நிலையில், அவை அக்காலத்தில் இடம் பெற்றிருந்தன என்பதை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, வால்மீகத்தில், அவை இடம் பெற்றுவிட்டமையினாலேயே, அவை இராமர் காலத்தவை ஆகிவிடா. அவை, இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன