பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ក្លឆ្អៅ នារជ្វាសrញ្ញ பெரும் அளவில் புதியன புகுத்தலுக்கும் திருத்தங்களுக்கும் ஆளாகிவிட்டதாகத் தெரிகிறது. காரணம் : அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சில வழிபாட்டு நெறிகள், அவை மிகமிகப் பிற்பட்டன. ஆதல் கூடுமோ என்ற ஐயுணர்வை எழுப்புமளவு அத்துனை விரிவாக உள்ளன. வான்கோள்களை, அவை: ஆட்சி புரியும் வார நாட்களின் வரிசையில் குறிப்பிட்டி ருப்பது, அச்சூத்திரங்கள், பிற்காலத்தில், வரன்முறையின்றித் திருத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. வடஆரியப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான தென்னாட்டவர் பழக்க வழக்கங்கள் : தென்னாட்டுப் பிராமணர்களின் வாழ்க்கை முறை களுக்கான விதிகளை வகுக்கும்போது, பெளதாயனர், ஆரிய வர்த்தத்து ஆரியர்களுக்கு ஒருவகையில் வெறுப்பூட்டு வனவும், தென்னாட்டவர்களுக்கே உரியனவுமாய வழக்கங்களை இயல்பாகவே விவாதிக்கிறார். தென்னிந் தியர்கள், ஆரிய வழிபாட்டு நெறியை ஏற்றுக் கொண்டு, ஆரிய வாழ்க்கை முறைகளுக்குக் கட்டுப்பட்டுவிட்ட பின்னரும், கைவிட்டுவிடாது, மேற்கொண்டிருந்த பழைய, தஸ்யூ வழக்கங்கள் ஐந்து, பெளதாயனரால் குறிப்பிடப் பட்டுள்ளன. "அவையாவன : சமயதிக்கை பெறாதவரோடு உடன் இருந்து உண்ணல், மகளிரோடு இருந்து உண்ணல்; பழைய உணவை உண்ணல், ஒருவன், தன் தாய்வழி அம்மான் மகளோடும், தந்தையோடு உடன் பிறந்தாள் மகளோடும், காதல் உறவு கொள்ளுதல்: . கூறிய இவ்வழக்கங்கள் ஒவ்வொன்றிற்கும், அந்நாட்டு நடைமுறை விதியே, அதிகார உரிமையுடையதாகக் கருதப்பட வேண்டும். (யததத் அனுபதென ஸஹபோஜனம்: ஸ்திரியா எபஹபோஜனம், பர்யுவித போஜனம், மாதுல பித்ருஸ்வஸ்ற்துஹறிதிர் கமதம், இதி. தத்ர தேசப்ராமாண்யம் எவஸ்யாத் - Baudhayana thama Sutras, 1 : 1, 2, 3, 6) வடநாட்டு, வாழ்க்கைச் சட்ட வல்லுநராகிய கெளதமர், உள்நாட்டு வழக்கங்களை, அடிப்படை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப்